Wednesday, 4 March 2015

☼21-விழியும் வழியும்-21☼ -மனம் மூன்று123,etc... ‍‍۞தாஸோஹம் பிரபு۞

மனம் மூன்று வகைப்படுத்தலாம். அவைகள்
  மேல் மனம் (conscious mind)
  நடு மனம் (sub-conscious)
  ஆழ் மனம் (super-conscious)

     இதில் மேல் மனம் என்பது, உடல் சம்பந்தமுடையது. இந்திரியங்கள் மூலம் அறிவது, செய்வது.

     நடு மனம் என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அன்பு, இன்பம், துன்பம் முதலியன. இதில் அன்பை மையமாக வைத்துக்கொண்டு பார்த்தால் சிலர் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்டாய பயிற்சி செய்கிறவர்கள் உள்ளனர். அவர்கள் எந்த அளவுக்கு அன்பை மேம்படுத்தி பயிற்சி செய்ய முற்படுகிறார்களோ அதே அளவுக்கு வெறுக்கவும் தயார் ஆவார்கள். அன்பு என்பது யதார்த்தமாக வருமாகில் அதுவே உண்மையான அன்பு. அன்பு எக்காரணத்துக்காகவும் மாறாது. கட்டாயத்தில் ஏற்படுத்தியது என்றும் நிலைத்திருக்காது. அன்பு மட்டுமல்ல நாம் பல வேலைகளில் இதை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம் பின்பு அடுத்த வேலைகளில் சோம்பேறித்தனம் ஆகிவிடுவோம். அதாவது மனம் முன்பு ஒன்று நினைக்கும் பின்பு வேறொன்றை நினைக்க நேரிடும். இதற்கு காரணம் யதார்த்தமாக இல்லாதது தான்.

     இதில் ஆழ்மனம் என்பது ஞானம். நம் உள் இருந்து உதித்தாலும் வெளியில் உள்ள பொருளை சம்பந்தப்படுத்துவது. அப்போது உள் (அகம்) என்றும் வெளி (புறம்) என்றும் ஒன்றும் தெரியாது. பிரபஞ்சம் வேறு அல்ல நான் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதாகும்.

சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே
                                                        - ஸ்ரீ தாயுமான சுவாமி

மரப்பாவை போலொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டி
திறக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்தபொழுதே
தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே
                                                - பாம்பாட்டிச் சித்தர்

      பொம்மலாட்டத்தில் மறைவாய் திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவர் இயக்க, பாவைகள் மேடையில் ஆடுவதைப் போன்றதே மனித வாழ்க்கை. ஆட்டுவிப்பவன் நிறுத்தினால் ஆட்டம் நின்று போய்விடும்.

      திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலின் "பாட்டும் நானே" என்று பாடகர் பின்னனியில் இருந்து பாடுகிறார். அவர் பாடுவதற்கு ஏற்ப வாய் அசைத்து நடிகர் ஒருவர் தானே பாடுவதுப்போல் நடிக்கிறார். இதில் முதல் தத்துவம் அடங்கி இருக்கிறது. இதில் இறைவன் கர்த்தா(ஆட்டுவிப்பவர்) நாம் கருவி என்று புரிகிறது. இதில் மனிதர்கள் "நான்" தான் பேசுகிறேன், பார்க்கிறேன், கேட்கிறேன், நுகர்கிறேன், உணர்கிறேன், அனைத்தையும் செய்கிறேன் என்று அகங்காரமாக நினைக்கிறார்கள். நீ அரசனாக இருந்தாலும் அந்த ஆண்டியை (முருகனை) மறக்கக் கூடாது. இது அகங்காரத்தையும் மமகாரத்தையும் நீங்க ஒரு எளிய வழி.

      இப்போது இரண்டாம் தத்துவத்தை பார்த்தால் புராண ரீதியாக சிவனே உண்மையில் வந்து பாடி நடித்து இருக்கிறார். இதில் அனைத்திற்கும் சிவனாரே சம்பந்தப்பட்டு இருக்கிறார். அச்சூழ்நிலையை அமைத்ததும் சிவனாரே. ஆகையால் காரணம் , காரியம் அவரே என வந்து அமைகிறது. அனைத்தும் சிவனே என்பது தான் ஞானம்.

ஆதியுட னந்தமுமே பிரம ரூப
            மடிமுடிவு நடுவெவையும் பிரம ரூபம்
பூதமொடு பவிடியமும் பிரம ரூபம்
            பொருந்திநிகழ் பொருளெவையும் பிரம ரூபம்
பேதமிலாப் பிரமமலா தணுவு மில்லை
            பிரிவெனவே காண்பவெலாம் பிரமரூப
மாதியிலாப் பரமசிவன் பதந்தன் னாணை
            யறைகின்றே னையமிலை சக்தி யந்தான்

                                                        - ரீபு கீதை (11-16)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.