நீங்கள் செய்யும் செயலுக்கு
ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள்
இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே
மாற்றி அமைக்கலாம் !
ஞான ஊற்று
- தாஸோஹம் த. பிரபு
1. யோசிக்காமல்
நேசியுங்கள். விரும்புவதற்காகத்தான் அனைத்தையும் படைக்கப்பட்டு இருக்கிறது வெறுப்பதற்காக இங்கு எந்த படைப்பும்
இல்லை.
2. லௌகீக
வாழ்க்கையில் ஆன்மிகமும் ஆன்மீக வாழ்க்கையில் லௌகீகமும்
இருந்தால் வாழ்க்கை முறை ஆத்ம திருப்தியுடன்
இருக்கும். லௌகிகத்தில்
கால் பங்கு ஆன்மீகமும், ஆன்மீகத்தில்
கால் பங்கு லௌகீகமும் இருந்தால்
முழுத்திருப்தியுடன் வாழ்க்கை அமையும். இதில் ஏதேனும் ஒன்றை
முழுமையாக்க நினைத்தால் மானிட வாழ்க்கை வீண்
!
3. நீங்கள்
இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான்
வெளியே பயணம் செய்வீர்கள்? உள்
நோக்கி பயணம் செய்து பாருங்கள்
! வாழ்க்கைப் பிரயாணம் ஆனந்தமாக இருக்கும்.
4. நாம்
செய்யும் செயல்கள் அனைத்தும் கனவுகள் கண்ட கற்பனையே
!
நீ அவைகளுக்கு சம்பந்தப்பட்டும் அப்பாற்பட்டும் பார்ப்பவன்.
5. ஒரு
மிளகை எடுத்து ஆராயுமிடத்தில் மிளகு
தூள்களை (ஆத்மா) கொண்டது தான்
மிளகு (பிரம்மம்) மிளகில் இருக்கும் காரமே
மிளகு தூளிலும் அதே காரம் தான்
இருக்கும். காரணம், அதே மிளகின்
மிளகுத்தூள். ஆதலால் ஆத்மாவுக்கும் பிரம்மத்துக்கும்
யாது ஒரு வித்தியாசமும் இல்லை.
மிளகு பார்ப்பதற்கு பப்பாளி விதைப் போல்
இருக்கும் இதுவே மாயை.
6. இறைவனை
அடைவது தன்னை அடைவதாகும். தன்னை
அடைவதன் மூலம் இறைவனை அடையப்பெறுவாய்.
7. மனதை
கையாளும் விதத்தில் கையாண்டால் , கையாண்ட விதத்தில் நீ
அடையப்பெறுவாய்.
8. நாம்
அடைவதற்கு இன்னும் வேறு ஒரு
நிலை இல்லை நாம் இப்போது
இருக்கும் நிலையே அடைந்த நிலை
(நம் இயல்பான நிலை) ! புரிந்துக்கொண்டால்
சரி. படைக்கப்பட்ட அனைத்தும் அடைந்த நிலையே. இதனை
உணர்வதற்குத்தான் இத்தனை போராட்டங்களுடன் கூடிய
யோக சாதனை. யதார்த்தமான நிலையில்
நாம் இருந்தால் தான் யதார்த்த நிலையிலிருக்கும்
நித்தியப் பொருளை அடையமுடியும்.
9. உன்னிலும்
புறத்திலும் உள்ள பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
அனைத்து இடையிராது போதனையை உனக்காக போதித்துக்
கொண்டு இருக்கும் குரு. விழிப்புணர்வுடன் இதனை
ஏற்று அறிந்துக்கொள்ள இருக்கும் சீடர் நீ. உனக்கு
நீயே குருவும் சீடரும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.