Thursday, 9 April 2015

ஜாதகத்தை சாதகமாக்க-12ஞானத்தின் பங்கு12

 நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே மாற்றி அமைக்கலாம் !
                         ஞானத்தின் பங்கு
                                                                                - தாஸோஹம் . பிரபு

1. பனிகட்டியைப் போல் நாமஜெபத்தை சிந்தித்து கொண்டு இருக்க வேண்டும். பனிக்கட்டியில் இருந்து கரையும் தண்ணீரைப் போல் நாமஜெபத்தை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.

2. கோவிலிலோ அல்லது ஆசிரம மடத்திலோ தன்னை ஈடுபடுத்தி எதையும் எதிர்பாராமல் பகவான் நமக்கு நியமித்த பணியாகவே அதை செய்து வரவேண்டும்.

3. வழிப்பாட்டுக்குரிய இடம் சக்தி ஊட்டப்பட்ட இடமாக அமைகிறது. அதில் நாம் தினமும் தியானம் செய்ய வேண்டும். சுவற்றில் எறும்பு மேல் நோக்கி ஊர்ந்துக் கொண்டு இருக்கையில் அதை நம் விரலால் எவ்வளவு முறை தடுத்தாலும் சிறிது கீழே வந்து பின்பு மேல் நோக்கி போகத்தான் முற்படும். மேலே சென்று இலக்கை அடைந்து விடும். அதுப்போல தியானத்தின் போது கீழான சிந்தனை வந்தாலும் மேலான இறை சிந்தனையிலே திழைத்திருக்க முற்பட வேண்டும். இலக்கு நிச்சயம் அடையப்படும்.

4. நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமாவது கட்டாயம் இந்திரியங்களாலும் அந்தக்கரணத்தாலும் கடவுளுக்காக வழிப்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும். உங்கள் நெற்றியில் எப்போதும் சந்தனம், குங்குமம், திருநீரு போன்றவற்றை பூசி இருக்க வேண்டும்.

5. அருளாளர்கள் அருளிய நூல்களை தினமும் படிக்க வேண்டும். சாதுக்களுடனும் சான்றோர்களுடனும் இணக்கமாக இருத்தல் வேண்டும் (சத் - சங்கம்). சாது, சான்றோர், ஆசிரம அன்பர்கள் , தாய்மார்கள், எளியவர்களுக்கெல்லாம் கட்டாயம் மனதில் சிறிதும் அஹங்காரமின்றி சேவை செய்ய நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்இல்லாதவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.

6. பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு முன்பே எழுந்து மலம் கழித்தான பிறகு பல் துலக்கி, குளித்து தூய ஆடை அணிந்து பிரம்மமுகூர்த்த நேரத்தில் (காலை 4.30 மணி) இறைவன் சந்நிதியில் திருப்பள்ளியெழுச்சியை பாடி தன்னை எவ்வாறாவது ஆத்ம சாதனையில் ஈடுபடுத்த வேண்டும்.

7. அதிகாலையில் பூச்சிகள் பூவில் உட்காருவதற்கு முன்பே பூவை எடுத்து மற்றும் இறை வழிபாட்டிற்காக பயன்படுத்தும் பொருள்களை (சந்தனம் அரைத்தல், குங்குமம் குழைத்தல், பூஜை பாத்திரத்தை விளக்குதல் முதலியன) பொருள்களை ஆயத்தப் படுத்த வேண்டும்.

8. கடவுளுக்கு யக்ஞமாக மாறி அமைகிறது நைவேதனம். கடவுளுக்கு படைத்து பூஜைகளை செய்தான பின்புத்தான் பிரசாதமாக சாப்பிட வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி கிடைத்த உணவை இறைவன் கொடுத்த பிரசாதமாக சாப்பிட வேண்டும். உணவு மட்டுமில்லை நாம் செய்யும் அனைத்தும் யக்ஞமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் வேண்டும்.

9. தினமும் ஒரு மணி நேரமாவது மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது எந்த செய்கையையும் பண்ணக்கூடாது, நாளுக்கு நாள் முடிந்த அளவுக்கு மௌனத்திற்காக அதிகப்படியான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
10. தூங்குவதற்கு முன்பு இன்றைய நாள் எவ்வாறு கடந்தது என்று எண்ணி எதற்காகவும் மனம் சஞ்சலமின்றி , தவறு ஏதேனும் இருந்தால் தன்னை மாற்றிக்கொள்ள முறையாக திட்டமிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி தூங்க வேண்டும். அதிகாலையில் பூ மலர்வது போல் எந்த சஞ்சலமுமின்றி வேலை திட்டத்தின் எண்ணமும் இல்லாமல் துயில் எழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

11. ஏகாதசி சிவராத்திரி போன்ற நாள்களில் விரதமும், நம் குரு பரம்பரையான அனைத்து மகான்களின் குரு பூஜை நாளன்றும் அவர்கள் சிந்தனையில் இருந்து அவர்கள் அருளிய திருப்பதிகங்களையும் பாராயணம் செய்து ஆத்ம திருப்தியுடன் அவர்கள் நினைப்பில் பொழுதை போக்க வேண்டும்.

12. நீங்கள் தங்கும் அறையில் குறைந்தது பத்து மகான்களின் படமும் , குருவின் படமும், சித்தர்களின் படமும், கடவுளின் படமும் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை நீங்கலாக படங்களுடன் கூடிய செய்தித்தாலோ மற்ற படங்களோ அறையில் உள்ளே இருக்காதபடி கட்டாயம் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வறையில் எப்போதுமே தெய்வீக ஒலி ஒலிக்கட்கும், ஒளி ஒளிரட்டும், நினைத்தால் தான் கவலை நினைக்காமல் விட்டால்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.