Tuesday, 5 May 2015

Ramaசிந்தித்தால் சித்திக்கும்Rama


நன்மையும் செல்வமும் நாளும் [அறம் (தர்மம்) பொருள் (அர்த்தம்)                                            இன்பம் (காமம்) வீடு (மோக்ஷ்ம்)] நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்
                                                                         _ கம்பர்

அந்தி, காலம், உச்சிமூன்றும்
            ஆடுகின்ற தீர்த்தமும்,
சந்திதர்ப் பணங்களும்,
            தபங்களும், செபங்களும்,
சிந்தைமேவு ஞானமும்
            தினம்செபிக்கும் மந்திரம்
எந்தை ராம! ராம! ராம!
            ராம! என்னும் நாமமே
                                                       _ சித்தர் சிவவாக்கியர்

          "Linga (form & formless) is the part of Shiva+Sakthi = Hara+Uma=Rama. Before the avatar of Lord Rama the holy mantra Rama is "Tharaga Brahmam". Athma sadhana which rulesless Yak-gnam of Rama Nama whose hearted mind with love gets chanted means Jaba sidhi into Andhakarana sudhi then full filled as Jeevan Mukthi, then how much distance between sadhaga and God is nothing as "Sayuchiam"
                                        - Dhasoham Tha Prabu

         You can talk with God only way through sweetness of Ram Nam mantra.
        "Om Sri Ram Jai Ram Jai Jai Ram "

                                        - Dhasoham Tha Prabu

Tuesday, 21 April 2015

தினமும் அனுதினமும்

        

அறிய வேண்டிய தாய் மதமான இந்து மதத்தின் இரண்டு கண்கள்:

* நமது ஹிந்து மதத்தின் சாஸ்திர நூல் "பிரஸ்தானத்திரயம் "
[உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்), பகவத்கீதை]

* நமது ஹிந்து மதத்தின் ஆறு சமயங்கள் (ஷண்மதம்)
காணாபத்தியம் _ விநாயகர்
கௌமாரம் _ முருகன்
சைவம் _ சிவன்
சாக்தம் _ சக்தி
வைணவம் _ விஷ்ணு
சௌரம் _ சூரியன்

       "  நம் பாரம்பரியத்திற்கு மதிப்புக் கொடுப்போம் !
         நம் கலாச்சாரத்தை மேம்படுத்துவோம் !! "

தினமும் அனுதினமும் :

படிக்க வேண்டியது ªவையார் திருவள்ளுவர் அருளியது
ஓத வேண்டியது வேதமும் சந்நியாசி கீதமும்
பேச வேண்டியது ஹிதமாகவும் சத்தியமாகவும்
செய்ய வேண்டியது உழைப்பும் சேவையும்
சிந்திக்க வேண்டியது அறிஞர்கள் மகான்கள் அருளிய
                                                                                    போதனைகள்
நினைக்க வேண்டியது பெற்றோரையும் குருவையும் தெய்வத்தையும்.


" மனித வாழ்வில் படிக்கவேண்டிய ஒரே நித்தியமான தர்மமான                                                                       நூல் "சந்நியாசி கீதம்"
வைதிக ஸனாதன ஹிந்து தர்மத்தை அறிந்து உணர (www.poornalayam.org)"

             " அணுவிலும் அணு அணுவாக அமைதியும்
            ஆனந்தத்தையும் உணர எனது பிரார்த்தனை"


Thursday, 16 April 2015

5ஐம்பூதங்களுக்கு சமர்ப்பணம்5_ தாஸோஹம் த. பிரபு

ஐம்பூதங்களுக்கு சமர்ப்பணம்
                                                                     _ தாஸோஹம் . பிரபு

1.சமநிலையும் அன்பையும் ஆகாசத்தில் இருக்க செய்து
2.தற்பெருமையும் பயத்தையும் காற்றில் பறக்க விட்டு
3.பழியையும் (பழி சுமத்தல், பழி தீர்த்தல்) பொறாமையும் தீயில் இட்டு                                                                                       கொழுத்தி
4.துணிவையும் எளிமையும் நீரில் கலக்கி குடித்து
5.ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் மண்ணில் விதைத்து பயிரிடு

       இதன் மூலம் பஞ்சபூதங்களின் நிறைவை காண்பாய்.

Thursday, 9 April 2015

ஜாதகத்தை சாதகமாக்க-9ஞான ஊற்று9

 நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே மாற்றி அமைக்கலாம் !
                         ஞான ஊற்று
                                                                    - தாஸோஹம் . பிரபு

1. யோசிக்காமல் நேசியுங்கள். விரும்புவதற்காகத்தான் அனைத்தையும் படைக்கப்பட்டு இருக்கிறது வெறுப்பதற்காக இங்கு எந்த படைப்பும் இல்லை.

2. லௌகீக வாழ்க்கையில் ஆன்மிகமும் ஆன்மீக வாழ்க்கையில் லௌகீகமும் இருந்தால் வாழ்க்கை முறை ஆத்ம திருப்தியுடன் இருக்கும்லௌகிகத்தில் கால் பங்கு ஆன்மீகமும், ஆன்மீகத்தில் கால் பங்கு லௌகீகமும் இருந்தால் முழுத்திருப்தியுடன் வாழ்க்கை அமையும். இதில் ஏதேனும் ஒன்றை முழுமையாக்க நினைத்தால் மானிட வாழ்க்கை வீண் !

3. நீங்கள் இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் வெளியே பயணம் செய்வீர்கள்? உள் நோக்கி பயணம் செய்து பாருங்கள் ! வாழ்க்கைப் பிரயாணம் ஆனந்தமாக இருக்கும்.

4. நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் கனவுகள் கண்ட கற்பனையே !
நீ அவைகளுக்கு சம்பந்தப்பட்டும் அப்பாற்பட்டும் பார்ப்பவன்.

5. ஒரு மிளகை எடுத்து ஆராயுமிடத்தில் மிளகு தூள்களை (ஆத்மா) கொண்டது தான் மிளகு (பிரம்மம்) மிளகில் இருக்கும் காரமே மிளகு தூளிலும் அதே காரம் தான் இருக்கும். காரணம், அதே மிளகின் மிளகுத்தூள். ஆதலால் ஆத்மாவுக்கும் பிரம்மத்துக்கும் யாது ஒரு வித்தியாசமும் இல்லை. மிளகு பார்ப்பதற்கு பப்பாளி விதைப் போல் இருக்கும் இதுவே மாயை.

6. இறைவனை அடைவது தன்னை அடைவதாகும். தன்னை அடைவதன் மூலம் இறைவனை அடையப்பெறுவாய்.

7. மனதை கையாளும் விதத்தில் கையாண்டால் , கையாண்ட விதத்தில் நீ அடையப்பெறுவாய்.

8. நாம் அடைவதற்கு இன்னும் வேறு ஒரு நிலை இல்லை நாம் இப்போது இருக்கும் நிலையே அடைந்த நிலை (நம் இயல்பான நிலை) ! புரிந்துக்கொண்டால் சரி. படைக்கப்பட்ட அனைத்தும் அடைந்த நிலையே. இதனை உணர்வதற்குத்தான் இத்தனை போராட்டங்களுடன் கூடிய யோக சாதனை. யதார்த்தமான நிலையில் நாம் இருந்தால் தான் யதார்த்த நிலையிலிருக்கும் நித்தியப் பொருளை அடையமுடியும்.

9. உன்னிலும் புறத்திலும் உள்ள பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து இடையிராது போதனையை உனக்காக போதித்துக் கொண்டு இருக்கும் குரு. விழிப்புணர்வுடன் இதனை ஏற்று அறிந்துக்கொள்ள இருக்கும் சீடர் நீ. உனக்கு நீயே குருவும் சீடரும்.

ஜாதகத்தை சாதகமாக்க-12ஞானத்தின் பங்கு12

 நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே மாற்றி அமைக்கலாம் !
                         ஞானத்தின் பங்கு
                                                                                - தாஸோஹம் . பிரபு

1. பனிகட்டியைப் போல் நாமஜெபத்தை சிந்தித்து கொண்டு இருக்க வேண்டும். பனிக்கட்டியில் இருந்து கரையும் தண்ணீரைப் போல் நாமஜெபத்தை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.

2. கோவிலிலோ அல்லது ஆசிரம மடத்திலோ தன்னை ஈடுபடுத்தி எதையும் எதிர்பாராமல் பகவான் நமக்கு நியமித்த பணியாகவே அதை செய்து வரவேண்டும்.

3. வழிப்பாட்டுக்குரிய இடம் சக்தி ஊட்டப்பட்ட இடமாக அமைகிறது. அதில் நாம் தினமும் தியானம் செய்ய வேண்டும். சுவற்றில் எறும்பு மேல் நோக்கி ஊர்ந்துக் கொண்டு இருக்கையில் அதை நம் விரலால் எவ்வளவு முறை தடுத்தாலும் சிறிது கீழே வந்து பின்பு மேல் நோக்கி போகத்தான் முற்படும். மேலே சென்று இலக்கை அடைந்து விடும். அதுப்போல தியானத்தின் போது கீழான சிந்தனை வந்தாலும் மேலான இறை சிந்தனையிலே திழைத்திருக்க முற்பட வேண்டும். இலக்கு நிச்சயம் அடையப்படும்.

4. நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமாவது கட்டாயம் இந்திரியங்களாலும் அந்தக்கரணத்தாலும் கடவுளுக்காக வழிப்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும். உங்கள் நெற்றியில் எப்போதும் சந்தனம், குங்குமம், திருநீரு போன்றவற்றை பூசி இருக்க வேண்டும்.

5. அருளாளர்கள் அருளிய நூல்களை தினமும் படிக்க வேண்டும். சாதுக்களுடனும் சான்றோர்களுடனும் இணக்கமாக இருத்தல் வேண்டும் (சத் - சங்கம்). சாது, சான்றோர், ஆசிரம அன்பர்கள் , தாய்மார்கள், எளியவர்களுக்கெல்லாம் கட்டாயம் மனதில் சிறிதும் அஹங்காரமின்றி சேவை செய்ய நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்இல்லாதவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.

6. பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு முன்பே எழுந்து மலம் கழித்தான பிறகு பல் துலக்கி, குளித்து தூய ஆடை அணிந்து பிரம்மமுகூர்த்த நேரத்தில் (காலை 4.30 மணி) இறைவன் சந்நிதியில் திருப்பள்ளியெழுச்சியை பாடி தன்னை எவ்வாறாவது ஆத்ம சாதனையில் ஈடுபடுத்த வேண்டும்.

7. அதிகாலையில் பூச்சிகள் பூவில் உட்காருவதற்கு முன்பே பூவை எடுத்து மற்றும் இறை வழிபாட்டிற்காக பயன்படுத்தும் பொருள்களை (சந்தனம் அரைத்தல், குங்குமம் குழைத்தல், பூஜை பாத்திரத்தை விளக்குதல் முதலியன) பொருள்களை ஆயத்தப் படுத்த வேண்டும்.

8. கடவுளுக்கு யக்ஞமாக மாறி அமைகிறது நைவேதனம். கடவுளுக்கு படைத்து பூஜைகளை செய்தான பின்புத்தான் பிரசாதமாக சாப்பிட வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி கிடைத்த உணவை இறைவன் கொடுத்த பிரசாதமாக சாப்பிட வேண்டும். உணவு மட்டுமில்லை நாம் செய்யும் அனைத்தும் யக்ஞமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் வேண்டும்.

9. தினமும் ஒரு மணி நேரமாவது மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது எந்த செய்கையையும் பண்ணக்கூடாது, நாளுக்கு நாள் முடிந்த அளவுக்கு மௌனத்திற்காக அதிகப்படியான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
10. தூங்குவதற்கு முன்பு இன்றைய நாள் எவ்வாறு கடந்தது என்று எண்ணி எதற்காகவும் மனம் சஞ்சலமின்றி , தவறு ஏதேனும் இருந்தால் தன்னை மாற்றிக்கொள்ள முறையாக திட்டமிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி தூங்க வேண்டும். அதிகாலையில் பூ மலர்வது போல் எந்த சஞ்சலமுமின்றி வேலை திட்டத்தின் எண்ணமும் இல்லாமல் துயில் எழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

11. ஏகாதசி சிவராத்திரி போன்ற நாள்களில் விரதமும், நம் குரு பரம்பரையான அனைத்து மகான்களின் குரு பூஜை நாளன்றும் அவர்கள் சிந்தனையில் இருந்து அவர்கள் அருளிய திருப்பதிகங்களையும் பாராயணம் செய்து ஆத்ம திருப்தியுடன் அவர்கள் நினைப்பில் பொழுதை போக்க வேண்டும்.

12. நீங்கள் தங்கும் அறையில் குறைந்தது பத்து மகான்களின் படமும் , குருவின் படமும், சித்தர்களின் படமும், கடவுளின் படமும் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை நீங்கலாக படங்களுடன் கூடிய செய்தித்தாலோ மற்ற படங்களோ அறையில் உள்ளே இருக்காதபடி கட்டாயம் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வறையில் எப்போதுமே தெய்வீக ஒலி ஒலிக்கட்கும், ஒளி ஒளிரட்டும், நினைத்தால் தான் கவலை நினைக்காமல் விட்டால்?

Wednesday, 8 April 2015

ஜாதகத்தை சாதகமாக்க-27ஞானப்பாதை27

 நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே மாற்றி அமைக்கலாம் !
                     ஞானப்பாதை
                                                                       _ தாஸோஹம் . பிரபு

1. எதையும் பற்றுற்று (விருப்பு வெறுப்பு இல்லாத நிலை) சாட்சியாக பார்க்க பழகிக்கொண்டால் துன்பத்துக்கு ஒரு போதும் நம்மிடம் வழி இல்லை, இதுவே ஞானத்தின் வழி.

2. எதையும் ஆத்ம சாதனையாக கையாண்டு, இதனால் வரும் இன்பமோ துக்கமோ அதனை ஞானத்தின் துணைக்கொண்டு ஈஸ்வர பிரசாதமாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டதெல்லாம் கொடுப்பதற்கு என்பதால் ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அகங்காரமும், மமகாரமும் நீக்கி எவன் ஒருவன் பரமனிடம் சரணாகதி அடைகின்றானோ அவனே பிறவிப் பெருங்கடலை நீந்தி பரமனாகிய கரையை அடைய வல்லவன்.

4. எவன் ஒருவன் விலை மதிப்பற்ற எளிமை என்னும் வீட்டில் தஞ்சம் புகுகின்றானோ அங்கு எதிலும் நிறைவு பெற்று இருப்பான்.

5. பொறாமை என்னும் காடும், கோபம் என்னும் தீயும் சேர்ந்தால் முதலில் தன்னையும் அழித்து பிறகு சுற்றத்தையும் அழித்து வனத்தையே விரைவில் சாம்பலாக்க வல்லது.

6. என்கிற எழுத்தை பின்தொடர்ந்து ஏனைய எழுத்துக்கள் பின் தொடர்ந்து இருப்பது போல அன்பு என்கிற தெய்வீகத்தை பின் தொடர்ந்து சகலமும் பின் தொடர்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

7. எவன் ஒருவன் இப்பிரபஞ்சத்தில் நிறைவை காண்கின்றானோ அவனே இயற்கையின் திட்டத்தை நன்கு அறிந்தவன் ஆகிறான்.

8. எதிர்பார்ப்பு எங்கு உதிக்கிறதோ அங்கு அமைதி மறைகிறது. எதிர்பார்ப்பை விட்டெறிந்து, வந்து சேர்வதெல்லாம் நிலையற்ற சம்ஸ்காரங்களைத்தான் ஏற்படுத்தும் என அறிந்து தன்னில் தானே முழு திருப்தியைக் காணவேண்டும்.

9. இறை வழியில் ஐம்புலனை பயன் படுத்தினால் தான் அப்பேரின்பத்தை அடையமுடியும். இதனால் பஞ்சபூதங்களை ஆளுமையில் எடுத்துக்கொண்டதாக பொருள்.

10. பயம் என்பது தற்கொலை. அறியாமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

11. பிரமச்சரிய விரதத்தை தன்னளவில் மட்டும் மேற்கொள்வது தவறு. நாம் எவ்விதத்தில் வெளிப்பொருள்களை கையாளுவதின் பொருட்டு நம்மிடத்தில் பிரம்மச்சரியம் வந்து அமைகிறது. அப்போது தான் சந்நியாச விரதத்தை அனுஷ்டிக்க முடியும்.

12. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திலும் தத்துவத்தின் மாண்பை உணர்ந்து செயலை செய்வானாகின் தோஷம் ஒரு போதும் அவனை பின் தொடராது, இதன்மூலம் புத்திசாலித்தன வாழ்க்கையை நடத்துவனாகிறான்.

13. அடுத்தவர்கள் உரிமைகள் கொடுத்த போது உரிமைகளை மீறி செயல் பட நினைத்தீர்கள் என்றால் அதுவே தவறான சுதந்திரம்.

14. அசுர குணத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்கத் தன்னை ஆயுத்த படுத்துவானாயின் அதுவே அவனுக்கு கிடைக்க இருக்கிற தெய்வீகம்.

15. எதை செய்தாலும் ஆழ் மனதில் சற்று சிந்தித்து பாருங்கள் முடிவு எடுக்க தெரியவில்லை என்றபோது தாய் தந்தை இருந்தால் நாம் செய்யும் செயல்களுக்கு ஆதரவு தருவார்களா? என்று பாருங்கள் இல்லையெனில் அப்போதே மறந்து விடுங்கள். அக்காரியத்தின் பயனை அவர்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

16. ஒருபோதும் பிறரோடு ஒப்பிட்டு பார்க்காமல் தனக்கென ஒரு இலக்கை ஏற்படுத்தி தன்னம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.

17. பரம்பரை கோடீஸ்வரனாக இருக்கையில் எளிமையாக கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் ஏழையாக இருந்து தக்க உழைப்பால் கோடி கோடியாக பணம் குவிந்த போது அவன் எளிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் விருப்பப்படி மிக விரைவில் ஆடம்பர ஆசைகளை பூர்த்தியாக்கி விட்டு பின்பு அவனும் கட்டாயம் எளிமையாக இருக்க கடமைப்பட்டு இருக்கிறான். இதன் மூலம் தான் இருபாலரும் ஓர் விதத்தில் எல்லை இல்லா ஆனந்தத்தை உணர்வார்கள்.

18. அணுகுமுறை என்பது நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் அல்ல. எவ்வாறு மனப்பக்குவத்துடன் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதும் தான்.

19. தன்னடக்கத்தை மேற்கொண்டால் மட்டும் தான் தனிமனித ஒழுக்கம் ஏற்படும்.

20. எளிமை, பொறுமை, அறிவு, துணிவு, விடாமுயற்சி, யாவும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெற்றி.

21. உடல், மனம், புத்தி இவைகள் "நான்" இல்லை என்றபோதிலும், இவை அனைத்தையும் மதிக்க வேண்டும்.. அதேப் போலத்தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் வணங்க வேண்டும்.

22. பிரம்மச்சரிய ஆசிரமத்தில் இருப்பவர் பிறர் மனைவியையும் மகளையும் அன்னை பராசக்தியாகவே காண வேண்டும்.

23. இறையில் தெள்ளத்தெளிந்தவனாக இருக்க தன்னை விழிப்புடன் சிறந்த யுக்தியின் மூலம் பக்குவப்படுத்த வேண்டும்.

24. ஏமாறுவது ஏமாற்றம் இல்லை இப்பாடத்தில் கற்றதை துணைக்கொண்டு அடுத்த பாடத்தை விழிப்புணர்வுடன் தானே நடத்த வேண்டும். அடுத்த பாடத்தை நன்கு நடத்த முடியாதவனே ஏமாறுபவன் ஆகிறான்.

25. தெய்வீக உணர்வோடு நடத்தும் அனைத்து கர்மங்களுக்கும் தெய்வமே பொறுப்பு ஏற்கிறது.

26. ஓயாமல் போராடி கொண்டு இருப்பது வாழ்க்கை அல்ல. ஓயாமல் ரசிக்க யுக்தியை கையாளுவது தான் வாழ்க்கை.


27. கெட்ட எண்ணங்கள் மனதில் வருவதால் தவறு அல்ல. அதன் போக்கில் விட்டு நாம் பெரிது படுத்தி சிந்திக்காமல் விட்டால் மனது அவ்வெண்ணத்தை விட்டு விடும். அதனுடன் நாம் போராடினால் அவ்வெண்ணங்கள் பலப்பட்டு நம்மையே அது ஆளக்கூடிய அளவுக்கு வீரியம் ஏற்பட்டு விடும்.