மறுபிறப்பு (Reincarnation ) என்பதை இப்போது விசாரம்
செய்வோம். ஏதோ என் அறிவுக்கெட்டிய
விஷியத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதில் முழுவதும் ஹிந்து
மதத்தின் சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டது அல்ல இதில்
தவறு இருந்தால் முழுக்க முழுக்க என்னைச்
சார்ந்தது. ஆதலால் எந்த மதத்தின்
அடிப்படையான சாஸ்திரத்தை வைத்தும் ஆராய வேண்டாம். இது
என் தனிப்பட்ட ஆராய்ச்சி. இதில் பிரபுலிங்க லீலையில்
கூறப்பட்டது என் ஆராய்ச்சிக்கு ஒத்து
போனது.
பந்தத்தையும்
மோக்ஷத்தையும் உண்டாக்குவது மனது.
_ பிரபுலிங்க லீலை
பந்தம்
~ அறியாமையால் சம்ஸ்காரங்களை ஏற்படுத்துவது.
மோக்ஷம்
~ மெய்ப்பொருளை பற்றிய உண்மையை அறிந்து
உணர்வது.
ஜீவன் முக்தருக்கு பிறப்பு
இல்லை. ஆனால் பிராரப்த கர்மத்தை
அனுபவித்தே ஆக வேண்டும். ஜீவன்
முக்தி என்றால் ஸ்தூல சரீரம்
இயங்கும் போதே முக்திக்கு உரிய
தன்மையை அறிந்து உணர்வது.
பந்தப்பட்ட
மனதிற்கு கட்டாயம் பிறப்பு என்பது உண்டு.
பாவம் புண்ணியம், இவற்றுள்
ஒரு மதத்தில் புண்ணியம் என்பது மற்றொரு மதத்தில்
பெரும்பாவமாக இருக்கிறது.
நாம் பாவம் புண்ணியம்
என்று ஆராயுமிடத்தில் அடுத்தவர் (இதில் ஓரறிவு முதல்
ஆரறிவு வரை) மனம் கோணாமல்
செய்தால் அது புண்ணியம்.
அடுத்தவர்( இதில் ஓரறிவு முதல்
ஆரறிவு வரை) மனம் நோகும்படி
செய்தால் அது பாவம்
சூக்ஷ்மான மனதில் சூக்ஷ்மான அடுத்தவர்கள்
சாபம் (எண்ணம் மூலம் ) மனதில்
சூக்ஷ்மான முறையில் பதிவாகிறது. பாவம் செய்தவர்களுக்கு பல
மடங்கு பாதிப்பை உண்டாக்கி விடுகிறது.
இதனால் பல்வேறு விதத்தில்
ஸ்தூலம் (மனம் மற்றும் உடல்)
மூலம் துக்கப்படுவார்கள். மனதளவிலும் கூட பிறருக்கு கொடுதல்
நினைக்க கூடாது. இதுவும் கூட
பாவத்துக்கு உரியது. நம் எண்ணத்தின்
மூலம் மனதில் பதிவாக்கி கொள்கிறோம்.
நாம் செய்யாத தவறுக்கு சாபம்
வந்தால் அதனால் ஒன்றும் நமக்கு
நேராது. பிறர்க்கு தெரியாமல் தவறு செய்கிறோம் என்றும்
நினைக்க வேண்டாம். காரணம் அனைத்திற்கும் ஆத்மாவே
சாக்ஷ¢யாக இருக்கிறது.
ஏகோ தேவ: ஸர்வபூதேஷ¤ கூட:
ஸர்வவ்யாபீ
ஸ்ர்வபூதாந்தராத்மா |
கர்மாத்யக்ஷ:
ஸ்ர்வபூதாதிவாஸ: ஸாக்ஷ£
சேதா
கேவலோ நிர்குணஸ்ச ||
- ஸ்வேதாச்வதரோபநிஷத்
6-11
கடவுள் ஒருவரே, எல்லார்
உள்ளத்திலும் அவர் மறைந்திருக்கிறார். அவர்
எங்கும் நிறைப்பொருள். எல்லாரிடத்திலும் ஊடுருவியிருப்பவர். எல்லாச் செயல்களையும் அவர்
கண்காணிக்கிறார். உயிர்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடம். சாக்ஷ¢யாகவும் சுத்த சைதன்யமாகவும்
குணரகிதராகவும் அவர் இருக்கிறார்.
ஆத்மாவுக்கு இதனால் எந்த பாதிப்பும்
இல்லை . பிறப்பு எடுப்பது ஆத்மா
இல்லை, அது யாண்டும் இருந்தது
இருந்தபடியே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் ஆத்மாவே பாவம் செய்பவர்களிடமும்
இருக்கிறது. அனைத்திலும் இருப்பது ஒரே ஆத்மாவே. ஆதலால்
ஆத்மாவை பிரித்து பார்க்க தேவையில்லை.
வினையை அனுபவிப்பது மனமே
தவிர ஆத்மாவுக்கு அல்ல. கர்த்தாவாக (செயல்படுபவன்
) மனம் செயல்பட்டு கர்மபலனை உருவாக்கிறது மற்றும் சரீரத்தை எடுப்பதற்கும்
மனமே ஏதுவாக அமைகிறது.
சூக்ஷ்மான மனதில் சூக்ஷ்மான அடுத்தவர்கள்
வாழ்த்து (எண்ணம் மூலம்) மனதில்
சூக்ஷ்மான மனதில் சூக்ஷ்மான முறையில்
பதிவாகிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு பல மடங்கு இன்பத்தை
உண்டாக்கி விடுகிறது.
பொதுவாக ஆராயுமிடத்தில் எதற்கும்
ஆத்மாவே சாக்ஷ¢யாக இருக்கிறது.
இது எல்லாம் நாம் முன்பு
பார்த்த கர்மாவின் (வினை) அடிப்படையாகக் கொண்டதே
பாவம் புண்ணியம்.
இத்தகைய போக்கால் தக்க
சமயத்தில் கூலியை பெறுவதற்காக அடுத்த
பிறவியை எடுப்பதற்கும் மனமே வாய்ப்பாக அமையும்
(சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்
இதன் போக்கு உங்களுக்கு புரியும்)
பாவ புண்ணியத்தை போக்குவதற்கே
ஒரே இறைத்தன்மையான பரம் பொருளை உணர
மதம் பயன்படுகிறது. இதனால் ஜீவன் முக்தி
அடைந்த பின்பு தான் பிறப்பு
இல்லாமல் போகும். அத்தகையவர்க்கு
"மனோ
நாசம்"(பிரம்மத்துடன் லயம்) அடைந்து பிராரப்த
கர்மம் அழிந்த பின்புதான் முக்தி
(மனதில் இருந்து ஆன்ம விடுதலை)
(அ) மோக்ஷம் (விதேக முக்தி) அடையமுடியும்.
ஆன்ம பலத்தை கூட்டும் அளவுக்கு
ஆன்ம விடுதலை அடையமுடியும் !
மனோ நாசமானால் பைத்தியம்
தான் என்று பைத்தியக்காரத் தனமாக
இதனை பொருள்படுத்தக் கூடாது. பிரமத்துடன் லயமாவது
வேறு. மனநிலை பாதிக்கப்படுவது வேறு!
உதாரணத்தின் மூலம் சொல்ல வேண்டும்
என்றால் "ஒரு கண்ணாடியின் முன்
ரோஜா மலரை வைக்கிறோம். அப்போது
கண்ணாடி முழுவதும் மாசு படிந்து இருக்கிறது
அதனால் ரோஜா மலர் சுத்தமாக
தெரிவதில்லை இது "பைத்தியம்'. கண்ணாடியில் சற்று லேசாக மாசு
இருக்கிரது ரோஜா மலர் உள்ளது
உள்ளபடி தெரியவில்லை ஏதோ தெரிகிறது இது
"ஸ்ம்ஸாரி" வேறொன்று, கண்ணாடி எந்த ஒரு
தூசியும் இல்லாமல் பரிசுத்தமாக இருக்கிறது ரோஜா மலரை வைத்தால்
உள்ளது உள்ளபடி தெரிகிறது யாதோரு
வித்தியாசமும் இல்லாமல் இரண்டும் ஒன்றாக தெரிகிறது இது
"மனோ நாசம்"
மனோ பாவம் என்று
சொல்லும் ஒன்று இருக்கிறது. இதனை
மனம் பாவமுடையது என்றா? சொல்லுவது ! ஒவ்வொறுவரும்
"நான் (அகங்காரம்) எனது (மமகாரம்)" என்னும்
மனோ பாவத்துடன் இருக்கிறார்கள். இதனை மாற்றி ஆத்மனே
நித்தியம் என்ற மனோ பாவத்தை
கொண்டு வரமுற்பட வேண்டும்.
யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
- திருக்குறள்
346
தினமும் வீட்டில் குப்பையை
கூட்டி குப்பைத் தொட்டியில் போட்டு எடுத்த பின்பு
குப்பையை தீயிலிட்டு கொழுத்துகிறோம். இது தினமும் தொடர்
கதையாக இருக்கிறது. ஒரு நாள் குப்பைத்தொட்டி
உபயோகித்து உபயோகித்து அதுவும் ஒரு நாள்
குப்பையாக மாறிவிடும். அப்போது அந்தக் குப்பையையும்
நெருப்பிலிடுவோம். இங்கு நெருப்பிலிட்ட குப்பைத்தொட்டி
பண்பட்ட மனம். இப்போது குப்பையை
(எண்ணம்) வாங்குவதற்கு குப்பைத்தொட்டி (மனம்) இல்லை.
இங்கு மனதையே கடக்கும்
போது கட்டாயம் அனைத்தும் கடந்தாக வேண்டும் !
எண்ணாத
எண்ணம்எலாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ஆகச்
செய்ததுஇனிப் போதும் பராபரமே
உள்ளபடி
யாதும்என உற்றுஉணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம்
போனவழி காணேன் பராபரமே
- ஸ்ரீ தாயுமானசுவாமி
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரின்
பதினாறு நேரடி சீடர்களில் ஒருவர்
சுவாமி துரியானந்தர். அவருக்கு மூன்று முறை முதுகில்
ராஜபிளவை ஏற்பட்டது. சுவாமியை சிஷ்யர்கள் சிகிச்சை செய்ய வேண்டும் என்று
விருப்பப்பட்டனர். ஆனால் சுவாமிஜி அதற்கு
அனுமதி தரவில்லை. ஒளஷதம் (chloroform ) மூலம் ப்ரக்ஞை அற்ற
நிலையில் நான் இருக்க மாட்டேன்
என்று மறுத்தார். பின்பு சுவாமி பிரம்மானந்தர்
அவரிடம்,"ஹரி பாய், இவர்கள்
பொருட்டு நீ சிறிது நேரம்
சரீரத்தினின்று ஒதுங்கி இரு" என்று
கூறினார். ஓர் அறையை சுத்தம்
செய்யும் போது, நாம் அறையைவிட்டு
வெளியேறுவது போல் என்றார். ஆனால்
சுவாமிகள் ஒளஷதம் வேண்டாம் பத்து
நிமிடம் கழித்து அறுவை சிகிச்சை
பண்ணுங்கள் என்று சொல்லி, குறிப்பிட்ட
காலம் கழித்துச் சரீர உணர்ச்சிக்கு திரும்புவதற்காக
நேரத்தைக் கேட்டு கொண்டார். பிரலபமான
மருத்துவர்களும் "சித்தம் போக்கு சிவம்
போக்கு" என்று நினைத்து வெற்றிகரமாக
அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தனர்.
இதில் மிகப்பெரிய தத்துவம்
அடங்கி இருக்கிறது காரணம் நான் உடல்
அல்ல, நான் மனமும் அல்ல,
நான் புத்தியும் அல்ல என்று தெளிவாக
புரிகிறது. உடல் ஞாபகம் போனாலும்
கூட அது இருந்தது இருந்தபடி
இருக்கிறது அந்த சமயத்தில் இருந்தது
என்ன? அது எப்போதும் இருந்துதான்
ஆக வேண்டும். காலத்தில் மாறினால் அது உண்மை அல்ல
ஆதலால் அது எப்போதும் இருக்கிறது
அது தான் உண்மை சொரூபம்.
இது தான் நான் யார்
என்பதற்கான பதில் !
"அனைத்திற்கும் ஆசைப்படு" என்று எந்த ஒரு
சாஸ்திரமும் சொல்லவில்லை. தர்மத்துக்கும் சத்தியத்துக்கும் தான் ஆசைப்படு என்கிறது.
அனைத்துக்கும் ஆசைப்படுவது பேராசை, அது இறுதியில்
கண்டிப்பாக பெருநஷ்ட்டமான அழிவை ஏற்படுத்தும். முதலில்
தர்மத்துக்கும் சத்தியத்துக்கும் உட்பட்டு ஆசைப்பட வேண்டும். இறுதியில்
அந்த ஆசையையும் விட்டு விட்டு பிரம்மத்துடன்
லயமாக வேண்டும். பிரம்மத்துடன் லயமாவதும் ஆசை என்று நினைக்கவேண்டாம்,
காரணம் நீ உண்மையான நீயாக
இருக்கிறாய் (நீ நீதான்). ஆசை
என்பது நம்மில் வேறுபட்டதிலிருந்து அடைய
விரும்புவது நம்மில் (உடல், மனம், புத்தி)
இருப்பதை வெளிப்படுத்துவதும் தான். நீ உண்மை
நிலையான நிஜ சொரூபத்தில் இருப்பதால்
அது ஆசை கிடையாது.
தன்மயமாய்
நின்றநிலை தானேதான் ஆகிநின்றால்
நின்மயமாய்
எல்லாம் நிகழும் பராபரமே
_
ஸ்ரீ தாயுமானவர் சுவாமி
பத்து ஜாடி நீரில் சூரியனுடைய
பத்து பிம்பங்கள் தென்படுகின்றன. ஒவ்வொரு ஜாடியாக உடைத்தெறிந்தால்
சூரிய பிம்பமும் ஒவ்வொன்றாக ஒழிகிறது. ஜாடி நீரில் தென்படுகிற
சூரிய பிம்பம் போன்றது ஜீவாத்மன்.
யதார்த்த சூரியன் போன்றது பரமாத்மன்.
பத்து ஜாடிகளையும் அழித்து விட்டால் பத்து
பிம்பங்களும் போய் அழிகின்றன. அதனால்
அசல் சூரியனுக்குப் பழுதில்லை. ஜீவபோதம் போய் விட்டால் பரமாத்மனை
விளக்குதற்கு ஆள் இல்லை.
_
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
சூட்சமாக இருப்பது ஏதோ ஒரு விதத்தில்
தூலமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
உதாரணத்திற்கு, உங்கள் நண்பர் காகிதத்தில்
"மாதா, பிதா, குரு, தெய்வம்
" என்று எழுதி தருகிறார். அப்போது
நீங்கள் அந்த வாசகத்தை சூட்சமான
மனதில் பதிவாக்கிவிட்டீர்கள். இந்த காகிதம் தொலைந்துவிட்டது
ஆனாலும் வேறு ஒரு காகிதத்தில்
சூட்சமான மனதில் பதிவானதை முன்னிட்டு
அடுத்து காகிதத்தில் அந்த வாசகத்தை எழுதி
தூலமக்கி விட்டீர்கள். இதில் நண்பர் என்பது
"ஸமஸ்காரம்" , காகிதம் என்பது "உடல்"
, வாசகம் என்பது "மனம்" (எண்ணப் பதிவு).
மனதில் எழும் ஆசையின்
காரணமாகத் தான் பிறவி எடுக்கிறார்கள்.
இறக்கும் இறுதி தருவாயில் கட்டாயம்
அனைத்து ராகம் (விருப்பு), த்வேஷம்
(வெருப்பு) அனைத்தையும் நீக்கி பரம்பொருளின் உண்மை
இயல்பை உணர்ந்து அதன் மேல் மட்டும்
பித்து பிடித்தது போல் நாட்டம் செலுத்தினால்
மட்டும்தான் பிறவி இல்லை.
வேண்டுதல்
வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
- திருக்குறள் 4
ஆனால்
முன்பு வாழும் காலத்தில் வைராக்கியம்
(பற்றற்று) ஸமபாவத்துடன் இருக்க வேண்டும். ஸமபாவம்
இல்லாதவர்களைத்தான் ஸம்ஸாரி என்கிறோம்.
ஒரு நாளைக்கு A - Z நிகழ்வுகள்
நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில்
P, R, A, B, U என்ற நிகழ்வுகள் மிக முக்கியமாக மனதில்
ஆழ்ந்த சம்ஸ்காரங்களாக இன்று இந்த நிகழ்வுகள்
நடந்து இருக்கிறது. ஆனால் ஏனைய எதிர்பாராத
நிகழ்வுகளில் ஒன்றான "A" ,
"S" நிகழ்வுகள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது கனவில் வேறு சில
விதமாக வர வாய்ப்பு உள்ளது.
இதனை முன்னிட்டு நாம் எந்த ஆசையின்
மையமாக வைத்துக்கொண்டு பிறப்பெடுப்போம் என்பதை நம் பகுத்தறிவால்
உணரமுடியாது என்று என் திட்டவட்டமான
முடிவு. நாம் கனவு காணும்போது
இன்று நடந்த நிகழ்வுகள் தான்வரும்
என்பதில்லை இதனை நம் அனுபவத்தில்
பார்த்து இருக்கிறோம். பல நாட்களுக்கு முன்னால்
நடந்த நிகழ்வை இன்று நினைத்துக்கூட
பார்த்து இருக்க மாட்டோம், ஆனால்
ஓர் விதத்தில் வர வாய்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு கல்லூரி வாழ்க்கை முடிந்து
பத்து வருடங்கள் ஆகி இருக்கும் ஆனால்
நம் கனவில் நாம் தேர்வு
அன்று சில காரணத்தால் செல்ல
முடியாமலும், தேர்வில் நாம் மட்டும் தோல்வி
அடைந்ததாகவும் அல்லது தேர்வு நேரம்
முடியும் போது ஒரு பக்கம்
மட்டும் எழுதி ஏனைய தெரிந்த
கேள்வியை அவசரமாக எழுத முற்படும்
போது சக மாணவர்கள் தேர்வு
முடிந்து சென்றான போது ஆசிரியர்கள்
வினா தாளை கேட்பது போல
இன்னும் பல விதத்தில் கனவை
கண்டு இருக்கிறோம். பல நாட்கள் அனுபவித்த
சில நிகழ்வுகள் சேர்ந்து ஒரு விதமாக கனவை
அனுபவிக்கிறோம். இதேப்போல மறு ஜென்மம் என்பது பல
நாட்கள் செய்த சம்ஸ்காரங்களை முன்னிட்டு
பிறப்பு எடுக்க வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு ஓர் ஏழை இப்போது
இருக்கும் நிலையைத் தாண்டி பணக்காரன் ஆகவேண்டும்
என்று மனதில் திடமாக எண்ணி
தர்மத்துக்கு உட்பட்ட ஆசையில் வாழ்ந்து
கொண்டு இருக்கையில் இறக்க நேரிட்டது. அவன்
கட்டாயம் அடுத்த பிறவியில் பணக்காரனாக
பிறந்து பிறவி சூழலில் சிக்கி
கொள்கிறான்.
தர்மத்துக்கு மாறாக வாழ்ந்து நான்
பணக்காரனாக வேண்டும் என்று மனதில் திடமாக
நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கையில் இறக்க
நேரிட்டது, அவர் பாவ புண்ணியத்திற்கு
ஏற்ப கீழ் பிறவியிலிருந்து பக்குவப்பட்டு
மேல் பிறவியான மனித நிலைக்கு வரும்போது
பணக்காரனாக பிறப்பான். இதில் சிறிதும் கூட
மாற்றம் இல்லை. ஒருவனை மனதின்
துணைக்கொண்டுதான் வினை ஆட்டிப்படைக்கிறது.
புல்லாகிப்
பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த்
தேவராய்ச்
செல்லாஅ
நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப்
பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே
உன் பொன் அடிகள் கண்டு
இன்று வீடு உற்றேன்
-
சிவபுராணம்
நாம் முதன் முதலில்
மனிதனாக பிறந்த போது எந்த
பாவமும் புண்ணியமும் செய்யவில்லை. பின்பு எப்படி மனித
நிலைப்பெற்றோம் என்ற கேள்வி உங்களுக்கு
ஏற்படலாம். இதைப்பற்றி நாம் கஷ்ட்டப்பட்டு இது
எப்படி என்று சிந்திக்க தேவையில்லை.
காரணம் படைப்பின் போது முதன் முதலில்
ஓர் அறிவாக இருந்து ஐந்து
அறிவு வரை பரிமாணம் எடுத்து
தான் ஆறு அறிவான மனித
நிலையைப் பெறுவோம். பாவ புண்ணியம் எல்லாம்
முதன் முதலில் மனிதனாக பிறந்த
போதுதான் செயல்பட ஆரம்பிக்கும். பிறந்தான
பிறகு அவன் செயலுக்கும் எண்ணங்களுக்கு
ஏற்ப பாவ புண்ணியம் வினையாக
மறுஜென்மத்தை தொடரும். பாவ புண்ணியம் எல்லாம்
மனித நிலைக்கு மட்டும்தான். காரணம் ஏனைய அறிவுக்கு
அதனதன் சுபாவத்தில் தான் வாழ்ந்து ஆக
வேண்டும். மனிதனுக்கு இடையில் வேற்றுமையை பல
நாம் பார்த்து இருக்கிறோம். மனிதன் செய்த பல
புண்ணியம் சில பாவம் என்றபோது
அவன் விலங்கு நிலைப்பெற்று மனித
நிலையை அடைவான். சில புண்ணியம் பல
பாவம் என்ற போது கீழ்
நிலை பிறப்பில் இருந்து பிறப்பான், இதனை
நாம் அடுத்த ஜென்மம் (புனர்
ஜென்மம்) இந்த பிறப்பு தான்
எடுப்பார்கள் என்று துள்ளியமாக கனிக்க
முடியாது ஓர் யூகத்தில் நான்
சொல்லி இருக்கிறேன். மனித நிலைக்கு மட்டும்
ஏன் பாவ புண்ணியம் என்றால்
அவன் பகுத்தறிவு உடையவன் அதனை பயன்படுத்தாமல்
அறியாமையின் காரணமாக பிறப்பு எடுக்கிறான்
அறியாமையை போக்கி அண்டத்தில் உள்ளதே
பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று
உணர்ந்து அனைத்தும் பிரம்மம் அதுவே என்னுள்ளும் அதுவே
அனைத்தையும் சாட்சியாக பார்த்துக்கொண்டு இருக்கிறது, இதனை நாம் பார்க்க
முடியுமா? அனைத்திலும் அதனை உணரலாம். எந்த
வேற்றுபாதனையும் இல்லாமல் பார்க்கும் நம் கண்ணையே நம்மால்
பார்க்க முடியாத போது பார்ப்பவனை
எப்படி பார்க்க முடியும்?
வாழ்க்கையில் நாம் காணும் அனைத்துமே
cycle (பாவ புண்ணியத்திற்கு ஏற்ப) & recycle (மீண்டும் அதே மனித பிறப்பு)
என்பதே.
மனதில் balance (ஆசை) மற்றும் due (கர்மா)
இருப்பவருக்கு மறுபிறப்பு என்பது உண்டு.
ஆசைகள் இருக்கும் வரையில்
பிறவிகளைத் தவிர்க்க முடியாது. கற்கண்டு சாப்பிட வேண்டும் என்ற
ஒரு சிறிய ஆசையுங்கூட, மனிதனுக்கு
மறுபிறவியைக் கொடுக்கும். ஆசையை நுட்பமான ஒரு
விதைக்கு ஒப்பிடலாம். புள்ளியைவிடப் பெரியதாக இல்லாத ஒரு சிறிய
விதையிலிருந்து, பெரிய ஓர் ஆலமரம்
உண்டாகிறது. அது போலவே ஒருவனுக்கு
ஆசைகள் இருக்கும் வரையில் மறுபிறவி ஏற்பட்டே
தீரும்.
_
தூய அன்னை ஸ்ரீ சாரதா
தேவியார்
மனிதன் மரணம் அடையும்போது
அவன் செய்த தர்மமும் அதர்மமும்
அவனுடன் செல்கின்றன. மரணத்திற்குப் பிறகும் மனிதனை அவன்
செய்த பாவ புண்ணியங்கள் பின்
தொடர்கின்றன.
_ தூய
அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்
முக்தோபிமானி
முக்தோ ஹி, பந்தோ பந்தோபிமானி
கிம்
வதந்தி
இஹ ஸத்யேயம் யா மதி: ஸா
கதிர்பவேத்
-
அஷ்ட வக்ர கீதை
தன்னை முக்தன் என்று
எண்ணுபவன் முக்தனாகிறான். தன்னைப் பாசத்தில் கட்டுண்டவன்
என எண்ணுபவன் பந்தத்தில் திளைக்கின்றான்.
பிற மதத்தினர் பாபிகளே
! என்றுக்கூறி அவர்களையும் மற்றவர்களையும் பாபிகளாகிவிடுகின்றனர் !
ஒருவன்
எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
- பிரகதாரண்யக உபநிடதம்
எதன் இயல்பு படி
இறக்கிறாயோ அதுபடியே பிறப்பாய்.
"யத்
பாவம் தத் பவதி" - நீ
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது வேத
வாக்கு.
பிரம்மத்தின்
இயல்பு இவ்வாறு என்று அதை
மட்டும் மனதில் வைத்து இறந்தால்
அவ்வாறே நீயும் அடைவாய்.
"ப்ரஹ்ம
வித் ப்ரஹ்மைவ பவதி" _ பிரம்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்பது வேத
வாக்கு.
பாம்பால்
தீண்டப்பட்ட ஒருவன் எனக்கு விஷமேது
என்று ஆழ்ந்து எண்ணுவானாகில் பாம்பின்
விஷம் அவனை ஒன்றும் செய்யாது.
அதே விதத்தில் தன்னை முக்தன் என்று
ஒருவன் உறுதியாக எண்ணுவானாகில் அவன் முக்தன் ஆகிறான்.
_
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஒரு பெண் ஜீவன்
முக்தி அடைந்த ஆணிடம் காதல்
கொண்டு மனதில் தீவிரமாக நினைத்து
விட்டால், நீங்கள் நினைக்கலாம்
ஜீவன் முக்தரை அடைவதற்கு, அந்தப்
பெண்ணும் சம்பந்தப்பட்ட
ஜீவன் முக்தரான ஆணுக்கும் மறுபிறப்பு உண்டு என்று நினைக்கலாம்,
ஜீவன் முக்தி அடைந்தவர் விதேக
முக்தி அடையத்தான் வாய்ப்பு இருக்கிறது. இதில் யானை பலத்திற்கு
முன் நாய் பலம் இருந்து
என்ன பயன்? மனப்பதிவை நீக்க
மனதால் மாற்று வழியைக் கையாளுவது
தான் புத்திசாலித்தனம்.
சிலர் அவர்களின் பிரச்சனைக்காக
தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் அல்லது எதிர் பாராத
விதத்தில் ஏதோ விபத்து ஏற்பட்டால்
கூட அவர்களுக்கு நிச்சயம் பிறப்பு உண்டு. ஆத்ம
ஞானத்தை நன்கு உணர்ந்து இருந்தவனுக்கு
விபத்து ஏற்பட்டால் இறக்கும் தருவாயில் பயமின்றி ஆசைகள் சிறிதளவுக்கும் கூட
இல்லையெனில் அவருக்கு கட்டாயம் பிறப்பு என்பது இல்லை.
இதில் ஆத்ம ஞானம் அடைந்தவன்
தற்கொலை செய்து கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை. தற்கொலை செய்கிறவன்
ஆத்ம ஞானத்தை நன்கு உணராதவன்
ஆகிறான்.
தற்கொலை அல்லது விபத்து
மூலம் பிரிந்த ஜீவன் மறுபிறப்பு
எடுக்கிறது என்று பார்த்தோம். இதற்கு
ஒரு உபமானம் மூலம் கூற
இருக்கிறேன்.
சத்திரம் மடத்தில் வழிப்போக்கர்கள் உள்ளே புகுந்து தன்
தேவையை பூர்த்தி செய்த பிறகு கிளம்புகிறார்கள்.
சத்திரம் மடத்திலிருந்து தேவை பூர்த்தியாகாமல் வழிபோக்கண்
ஒருவன் சென்ற பிறகு வேறொரு
வழிப்போக்கன் கட்டாயம் வருவான்!
நம் வாழ்க்கையும் இந்த
சத்திரம் மடத்துக்கு ஒப்பாகும், சத்திர மடத்தில் வழிப்போக்கனாக
வந்தவர்கள் தான் நாம் ! கொண்டு
வந்த கர்ம வினை மூட்டையை
அவிழ்த்து பயன்படுத்தி முழுநிறைவுடன் ஆசையற்று செல்ல வேண்டிய இடத்துக்கு
செல்கிறோம். சிலர் மூட்டையிலிருந்ததையும் அனுபவித்துவிட்டு சத்திரத்தில்
உள்ள ஸம்ஸகாரங்களை " மூட்டையில் தன் பயன்பாட்டுக்காக அடுத்த
மடத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
கிருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம். இப்போது நாம் கலியுகத்தில்
இருக்கிறோம். ஒவ்வொரு யுகத்தில் ஜென்மத்தை
கடைத்தேற்றினோமா என்று அறிய ஒரு
உபாயம் இருந்தது. ஆனால் கலியுகத்தில் இருக்கும்
ஒரு உபாயம், இறைவனின் திருநாமத்தைக்
கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க் கூச்செடுத்துக் கண்களில்
பக்தி பாஷ்பம் (ஆனந்தக் கண்ணீர்) பெருகுமோ
அவனுக்கு அதுதான் கடைசி ஜென்மம்.
_ பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண
பரமஹம்சர்
யானே பொய் என்
நெஞ்சும்
பொய் என்
அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னை பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறும்ஆறே
- திருவாசகம்.