பலர் உருவ வழிபாடு
செய்பவரும் அருவு வழிபாடு செய்பவரும்
இரு பாலருடைய குறை சொல்வதை பலரிடம்
நாம் காதில் கேட்டு இருக்கிறோம்.
மனம் ஒன்று நினைக்கிறது என்றால்
கட்டாயம் அதில் உருவம் இருந்தாக
வேண்டும். நாம் தண்ணீர்க்கு உருவம்
இல்லை என்று வாயால் சொன்னாலும்
கூட இப்போது தண்ணீர் என்று
நினைத்தால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப
உருவத்தையும் நிறத்தையும் நினைப்போம். ஒரு குடத்தில் தண்ணீர்
இருக்கிறது. அப்போது அந்த தண்ணீரின்
உருவம் குடம் போன்றது. அதேப்போல
தான் உருவமில்லாத சக்தி உருவமுள்ள சிலையில்
இருக்கிறது. ஒன்றின் மீது பக்தியாக
நினத்து தேவையான சக்தியை பெற
விருப்புகிறோம், இதில் தவறு ஒன்றும்
இல்லை, அனைத்துமே இறைவன் என்ற போது
வெறுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை.
ஆரம்ப பள்ளியில் (உருவநிலை)
படிக்கும் மாணவரிடம் A,B,C,D, என்ற ஆங்கில எழுத்துக்களை
எல்லாம் ஆசிரியர் கற்றுத்தருகிறார். பின்பு, உயர் நிலை
பள்ளியில் (அருவநிலை) படிக்கும் போது ஆங்கில வார்த்தை
படிக்க (எ.டு. : so what?, metaphysics, epistemology) ஆரம்ப பள்ளியில் முன்பு
சொல்லிக் கொடுத்த எழுத்தை நினைவில்
வைத்தபடியே எழுத்தை கூட்டி படிக்கிறார்கள்
என்பதில் ஐயம் சிறிதும் கூட
இல்லை. அதேப்போல் ஆரம்பள்ளியில் உள்ள மாணவன் சிறந்த
முறையில் தன்னை பக்குவப்படுத்தி உயர்
நிலை பள்ளிக்குச் செல்ல முற்பட வேண்டும்.
பகவான் ஸ்ரீ ரமண
மஹரிஷியை தரிசிக்க வந்த ஒருவர், "ஸ்வாமி,
விக்கிரக ஆராதனை செய்வதை மூட
நம்பிக்கை என்று சிலர் கேலி
செய்கிறார்கள், என்ன செய்வது? என்று
வருத்தத்துடன் கேட்டார்.
இதற்கு பகவான் ,"அவர்களிடம்
'விக்கிரக ஆராதனையில் என்னை மிஞ்சும் ஆசாமிகள்
நீங்கள் என்று எதிர்வாதம் செய்வதுதானே?
தினமும் தங்கள் உடலைக் கழுவி,
அபிஷேகம் செய்து(குளித்து) நிவேதனம்
(உணவு) செய்து, ஆடை முதலியவற்றால்
அலங்கரித்து அதை அவர்கள் ஆராதிக்கவில்லையா?
உடலே எல்லாவற்றையும் விட
பெரிய விக்கிரகம் அல்லவா? அப்படி பார்த்தால்
யார்தான் விக்கிரக வழிபாடு செய்யாதவர்?" என்று
கேட்டார்.
உருவ நிலை என்பது
பார்த்து படிப்பது (மனப்பாடம் செய்வதற்கே) எ.டு. சிலை,
படம், முதலியன.
அருவ நிலை என்பது
பார்த்து படித்ததை (உருவநிலையை) பார்க்காமல் சொல்வது. பார்க்காமல் சொல்லலாம் நினைக்காமல் சொல்ல முடியாது.
அருவுருவ நிலை என்பது பார்க்காமல்
ஒருவர் சொல்வதை புத்தகத்தில் மற்றொருவர்
பார்ப்பது.
எ.டு. : சிவலிங்கம், சாளக்கிராமம்,
முதலியன்
உருவத்தை பழிப்பவர்கள் உருவமுள்ள தன்னையே தெரியாமல் பழித்துக்கொள்கிறார்கள்!
அருவமுள்ளதை பழிப்பவர்கள் இறுதியில் உருவம் இல்லாமல் அருவமாகத்
தான் போகப் போகிறோம்! (முடி
சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர்
- பட்டினத்தார்) என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
"எவர்
எவர்கள் எப்படிக்கண்டு எந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்கு அப்படி நின்றான்"
_
பத்திரகிரியார்
"யாவன் எந்த வடிவத்தில்
என்னை அணுக என்னை நாடி
வருவானாயினும் அவனுக்கு அவன் விரும்பும் வடிவத்தில்
நான் அவனை அடைகிறேன். இறுதியில்
என்னை வந்து அடையும் மார்க்கங்களில்
தான் எல்லா மக்களும் முயன்று
வருகின்றனர்" என்று கிருஷ்ண பரமார்த்மா
கீதையில் கூறியுள்ளார்.
கடவுள் எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் பரம்பொருள். உருவமுள்ள பொருளில் இருக்கும் போது உருவத்தோடு இருக்கிறார்.
நாம் உருவத்தோடு இருக்கிறோம் ஆகையால் நம்மிடம் உருவத்தோடு
நாம் கடவுளாக இருக்கிறோம். உருவம்
இல்லாத வஸ்துக்களில் அவர் உருவமற்று (அருவமாக
) இருக்கிறார். உருவம் உள்ள பொருளில்
உருவமாகவும், உருவம் இல்லாததில் அருவுமாகவும்
இருப்பதால் கடவுள் அருவுருவமாக இருக்கிறார்.
ஆகையால்
தான் "சிவமயம்" என்கிறோம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.