அவரவர்
பிராரப்தப்பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன் ;
என்றும் நடவாதது என்
முயற்ச்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை
செய்யினும் நில்லாது ;
இதுவே திண்ணம் ஆகலின்
மெளனமாய் இருக்கை நன்று
_ பகவான் ஸ்ரீ ரமண
மகரிஷி
பகவானை பூர்வ ஆசிரமத்திற்கு
அழைத்துச் செல்ல வந்த தாயார்க்கு
பவளக் குன்றில் எழுத்து மூலம் உபதேசம்
செய்தார். இதனை சிலர் தவறாக
புரிந்துக்கொண்டு பிரார்த்தனை தேவையில்லை வேலை செய்யாமல் சோம்பேறி
ஆக இருக்க திட்டமிட்டு அவர்களுக்கு
இந்த வாசகத்தை சாதமாக்கி கொள்கின்றனர்.
ஞானத்தில் முதிர்ந்தவர்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. மெளனமே
பூர்ண ஆனந்தமாக அவர்களுக்கு வாய்க்கப்பெறும்.
சும்மா
இருப்பதுவே சுட்டுஅற்ற பூரணம் என்று
எம்மால்
அறிதற்கு எளிதோ பராபரமே
_ ஸ்ரீ தாயுமான சுவாமி
இதில் நானும்கூட மெளனமாக இருப்பேன், இது
என்ன பெரிய விஷயமா? என்றும்
நான் எத்தனையோ முறை மெளனம் இருந்து
இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக நினைக்க
வேண்டாம். உங்கள் மெளனத்தை நான்
இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் மெளனம் எப்பேற்பட்டது
என்று பார்த்தால் ஏதோ ஒரு காமிய
பிரார்த்தனைக்காக (சிரேயஸ்) நீங்கள் மெளனம் இருக்க
வேண்டும் என்று கஷ்டப்பட்டு ஏற்படுத்திய
மெளனம். அதில் கையில் ஜாடை
காண்பித்து முனங்குவது, ஐம்புலன்களை அடக்காமல் அதன் விருப்பபடி செல்லவிடுவது.
இதனை நீங்கள் மெளனம் என்று
நினைத்துக்கொண்டு இருக்காமல் அவரவர் கடமையை தர்மத்துக்கும்
சத்தியத்துக்கும் உட்பட்டு ஒழுங்காக செய்ய வேண்டும்.
பித்து என்னை ஏற்றும்
பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம்
மத்தமே ஆக்கும் வந்து
என் மனத்தை - அத்தன்
பெருந்துறையான் ஆட் கொண்டு பேர்
அருளால் நோக்கும்
மருந்து இறவாப் பேரின்பம்
வந்து.
- திருவாதவூரர்
மெளனத்தில்
நான்கு படித்தரங்கள் உள்ளது. அவை
1. வாக்கு
மெளனம் : பேச்சை அடக்குவது
2. கரண மெளனம்
: இந்திரியங்களையும் மனதையும் அடக்குவது
3. காட்ட
மெளனம் : தொழிலற்றிருப்பது
4. சுழுப்தி
மெளனம் : அனைத்தையும் பிரம்ம சொரூபமாக காண்பது
இப்படி மெளனத்தை அனுஷ்டித்தால்
நீங்களும் நீங்கள் நினைத்த மாதிரி வேலை செய்யாமல்
இருக்கலாம்.
கர்மண்யகர்ம
ய: பச்யேதகர்மணி ச கர்ம ய:
|
ஸ புத்திமான்மனுஷ்யேஷ¤ ஸயுக் த: க்ருத்ஸ்னகர்மக்ருத்
||
- ஸ்ரீமத்
பகவத்கீதை
கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி ; அவனே யோகி ; அவனே
எல்லாம் செய்து முடித்தவன்.
தன் ஆத்ம சாதனை முன்னேற்றத்தின்
மூலம் மனதை பரிசுத்தமாக்க இறைவனிடம்
பிரார்த்தனை (பிரேயஸ்) பண்ணுவது தவறில்லை.
உள்ளன்போடு ஒருவன் இறைவனிடத்துப் பிரார்த்தனை
பண்ணவேண்டும். உள்ளூற ஒரு மனிதன்
எதை விரும்பிகிறான் என்பதை இறைவன் நன்கு
அறிகிறார். தூய்மையே வடிவெடுத்துள்ள பிரார்த்தனைக்கு அவர் செவி சாய்க்கிறார்.
இதில் சந்தேகம் இல்லை.
_
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
இதில் பரமஹம்சர் காமியப்
பிரார்த்தனை பண்ணும்படி குறிப்பிடவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும்
காமியப் பிரார்த்தனை தனக்கும் மற்றவர்க்கும் செய்து கொள்ளவில்லை.
தூய அன்னை ஸ்ரீ
சாரதாதேவியார் பிரார்த்தனை புரியும் போது " வெண்ணிலாவிலும்
சிறிது களங்கம் உள்ளது, அந்தக்களங்கம்
கூட இல்லாது எனது மனம்
தூய்மையில் நிலைத்திருக்கட்டும் " என்றார்.
அறிவுள்ள கடவுளுக்கு என்ன சமயத்தில் என்ன
பண்ண வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
நீங்கள் அவருக்கு அறிவுரைக் கூற முற்பட வேண்டாம்.
நீங்கள் செய்யும் அந்த ஒப்பந்தம் போடக்கூடிய
பிரார்த்தனையும் கூட
வேண்டத் தக்கது அறிவோய்
நீ
வேண்ட முழுவதும் தருவோய்
நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய்
நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது
அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின்
அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு
என்னில்
அதுவும் உன்தன் விருப்பு
அன்றே
- மாணிக்கவாசகர்
பிரம்ம
ஞானம் அடைந்த பிறகு அந்நிலை
வாய்க்கபெரும் அப்போது மெளனம் ஆகிக்கொள்ளலாம்.
அதுவரை ......... ஆம்
நன்கடம்பனை
பெற்றனன் பங்கினன்
திருக்கரைக்
கோவிலூரான்
தன்கடன்
அடியேனையும் தாங்குதல்
என்கடன்
பணிசெய்து கிடப்பதே
- திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.