எத்தனையோ
மதங்கள் இருந்த போதிலும் அந்த
மதத்தின் கோட்பாடுகளை முழுமையாக யாரும் கடைப்பிடிக்கவில்லை. சற்று
வேற்றுமையாகத்தான் அனைவரும் மதத்தினை வைத்து செயல் படுகின்றனர்.
ஆதலால், தன் மனபரிபாகத்துக்கு (பக்குவத்திற்கு)
ஏற்ப அவரவர் மதத்தின் மூலமாக
ஆத்ம சாதனையை மேற்கொள்ள வேண்டும்.
எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை
மதங்கள். ஆனால் குறிக்கோள் ஒன்று
தான், நாஸ்திகர்கள் உலோகத்தார்கள் உட்பட !
நம்முடைய அறிவும், திறமையும், முயற்சியும் ஓர் எல்லைவரைத் தான்
செயல்படுகிறது. நாம் நினைத்தபடி செயல்படுவதற்கும்
கடவுள் தான் நம்மை கருவியாக
செயல்படுத்துகிறார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
அனைத்துக்கும் ஓர் அப்பார்பட்ட சக்தி
தான் அந்த அளப்பரிய சக்தி
அதுவே அனைத்திலும் இருந்து ஆட்டிப்படைக்கிறது.
ஜடப்பொருள் நம் இயக்கத்தால் இயங்குகிறது.
நாம் வேறொரு அளப்பரிய சக்தியால்
இயக்கப்படுகின்றோம். நம்மையே ஆட்டுவிக்கும் அளப்பரிய
சக்தியால் நாம் இயங்கும் அதே
வேளையில் அதே அளப்பரிய சக்தி
தான் நம்மைக் கருவியாகக் கொண்டு
ஜடப்பொருளையும் இயக்குகிறது. இதெல்லாம் இயற்கை என்று சிலர்
பகரலாம். இயற்கையே மாறுதலுக்கு உட்பட்டது தான், இதனை நம்
ஊனக்கண் கொண்டு நாம் பார்த்திருக்கிறோம்.
மாறுதலுக்கு உட்பட்டது என்றால் கட்டாயம் அது
செயற்கை என்று தான் சொல்ல
முடியும். செயற்கையை
ஆக்குவதும் அவன் செயலே. அறிவினைக்
கொண்டு ஆராயும் போது இயற்கை
சீராக இருக்கும் நிலையை மீறி கொஞ்சம்
சீற்றத்துடனும் சீதோஷன நிலை மாறுபட்டாலும்
படாட்டியும் அது அளப்பரிய பிரம்ம
சக்தியால் இயங்கும் இயற்கையே தவிர வேறு ஒன்றும்
இல்லை. இயற்கையாய் இருந்து இயற்கையை இயக்குவதும்
அதுவே என்பது நம்மில் பல
பேர் முதலில் தெளிவாக புரிந்துக்கொள்ள
கடமைப்பட்டு இருக்கிறோம்.
அந்த அளப்பரிய சக்தியை
கொண்டு இயங்கும் அனைத்துமே ஒரு நியதிப்படி தான்
இயங்குகிறது என்பதில் மாற்றம் இல்லவே இல்லை. காரணம்
சிலருக்கு துன்பம் தரக்கூடிய விஷயம்
பலருக்கு இன்பம் தரும், பலருக்கு
துக்கம் தரக்கூடிய விஷயம் சிலருக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தும். மனிதனுக்குள் இப்பேற்பட்ட வேற்றுமையுடன் குழப்பம் இருக்கிறது. இதில் இவர்களுக்குள் ஏற்பட்டது
எது நியாயமானது என்று சொல்ல முடியாது.
எல்லாம் அவன் நியதிப்படி தான்
இயக்கி கொண்டு இருக்கிறான்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.