Thursday, 12 February 2015

☼14-விழியும் வழியும்-14☼ - ‍‍அந்தக் கரண சுத்தி ۞தாஸோஹம் பிரபு۞

ஐம்பொறிகளை முதலில் அடக்கக் கற்றுக்கொள்வது ஆத்ம சாதனையின் முதல் படி. அதற்கு அந்தக் கரணத்தை (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) சுத்தி செய்ய வேண்டும்.

      மனது பரிசுத்தமாக்க ஒரே உபாயம் இறைவனின் பரிபூரண நாமம் ஒன்றே முறையான மந்திர அக்ஷரங்களை கொண்ட ராம நாமம், ஓம் நமசிவாய (பஞ்சாக்ஷர மந்திரம்), ஓம் ஐம் மஹா சக்தியை நம: ஓம் நமோ நாராயணாய இவைகளைப் போல பல நாமம்

     ஐம்புலன்களை அதனதன் இஷ்ட்டப்படி விட்டு தக்க சமயத்தில் சிரமத்துக்கு ஆள்ளாகி கொள்கிறோம். கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும். உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்கும் திறன் அதிகமாயிருப்பதைக் காணலாம். அப்போது மனதை அடக்குவது உடலை வதைத்துவது, முதலியன தவம் கிடையாது. நமக்கும் பிரபஞ்சத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சி (மெய் ஞானம்) நம்மையும் பிரபஞ்சத்துக்கும் இணைக்கும் இறை ஆற்றலை (ப்ரஹ்மம்) பற்றிய விழிப்புணர்வை அடையச் செய்வது தான் தவம். அப்போது அந்த ஆற்றலே நம்மிலும் நம்மை சுற்றிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று உண்மையை உணர்கிறோம். தவம் செய்பவருக்கு அப்போது எது அகம், புறம் என்று அறியாமையில் இல்லாமல் அனைத்துமே ப்ரஹ்மம் என்று தான் உணர்வார்கள். புலன்களின் சலனத்தை குறைத்து நண்ணிய மனோ நிலைக்கு போவதால் ஓர்வித உணர்வு (அதை உள்ளுணர்வு என்றும் கூட சொல்லலாம்) விழிப்படைகிறது. நான் யார்? என்று பார்க்கச் சென்று பின்பு நான் என்ற உணர்வு இல்லாத நிலையான மனோ நாசம் ஆகி நிஜ சொரூபத்தை அடைவது. ஐம்பொறிகளையும் சரியான வழியில் அடக்கினால் அந்தந்த பொறிகளுக்குரிய வெளிப்படுத்தும் சக்தி மேம்படும்.

       மான் சப்தம் (காது) வரும் இடத்திற்கு சென்று பார்க்கையில் வேடனிடம் அகப்படும் யானை ஸ்பரிச (உடல்) உணர்வால் மற்றொரு இணையை தேடி செல்ல அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்துவிடும். பூச்சி தீப ஒளியில் (கண்) வெளிச்சத்துக்காக அதில் விழுந்து கருகிவிடும். மீன் புழுவின் சுவையால் (நாக்கு) தூண்டிலில் அகப்படும், பூக்களின் நறுமணத்தால் (மூக்கு) இதழ் மொட்டு மூடப்படுவதை உணாராது வண்டு மயங்கி மாளும். இப்படி ஒவ்வொறு இந்திரியங்கள் வசப்பட்டு போன உயிரினங்களின் கதி இவ்வாறு என்றால் நமது ஐந்து இந்திரியங்களும் நம் வசம் இல்லை, எனில் நம் கதி என்னவென்று சிந்தித்து ஆத்ம சாதனையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
       காதால் கேட்பவைகளெல்லாம் மங்களமானவைகளாய் இருக்கட்டும். கண்ணால் பார்ப்பவைகளெல்லாம் மங்களகரமானவைகளாக இருக்கட்டும். போற்றுதற்க்கு உரியதையே புகழ்ந்து பேசுவோமாக.
                                                                        _ ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
   கண்ணிருக்கும் போதே இறைவனை காண்
   வாயிருக்கும் போதே இறைவனை துதி
   மூக்கிருக்கும் போதே இறைவனை நுகர்
   காதிருக்கும் போதே இறைவனை கேள்
   உடலிருக்கும் போதே இறைவனை பரிசம் செய்.


ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து |
புத்திம் து ஸாரதிம் வித்தி மன : ப்ரக்ரஹமேவ ||
                                                - கடோபநிஷத் 3-3

      சரீரத்தை ரதம் எனவும் ஜீவாத்மனை அதில் ஊர்ந்து செல்லுபவன் எனவும் அறிக. இனி புத்தியைத் தேர் ஓட்டுபவன் என்றும் மனதைப் பிடி கயிறு என்றும் அறிந்துகொள்க. சில உயிரினங்களுக்கு எது நமக்கு இரவோ அவைகளுக்கு அது இரவாக வந்து அமைகிறது! நமக்கு இரவில் வெளிச்சம் இல்லையெனில் அதற்கு இரவில் நன்றாக கண் தெரிகிறது. ஊனக்கண்ணால் பார்ப்பதில் கூட ஜீவராசிகளுக்கு வேற்றுமையுள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

         ஜாக்கிர அவஸ்தை என்னும் விழித்திருக்கும் நிலையில் ஐம்பொறிகள் மூலம் நாம் அனுபவிக்கிறோம் (வ்யாவஹாரிக சத்யம்), ஆனால் சொப்பன அவஸ்தை என்னும் உறங்கும் போது நம் ஐம்பொறிகள் மூலம் நாம் எதுவும் அனுபவிக்கவில்லை இருந்தும் கண்ணால் பார்க்கக்கூடியதை பார்க்கிறோம், காதால் கேட்கக் கூடியதை ஒலியுடன் கேட்கிறோம் இப்படி ஐம்பொறிகள் மூலம் உணர்கிறோம். இப்படி ஐம்பொறிகள் வேலை செய்யாமல் அனுபவிக்கிறோம் (ப்ராதிபாஸிக சத்யம்). சுழுப்தி அவஸ்தை என்னுமிடத்து நாம் ஆழ்ந்து கனவின்றி உறங்கி விழித்தவுடன் நன்றாக உறங்கினேன் என்று உணர்வதெல்லாம் ஏது என்று ஆராயுமிடத்தில் மூன்று நிலையிலும் நடு நிலையாக எது சாட்சியாக பார்த்துக் கொண்டு இடுக்கிறதோ அதுவே உண்மையான நிலை. அதுவே எல்லாக் காலத்திலும் மாறாத நிலை(பாரமார்த்திக சத்யம்)

       இதில் துரியம் அவஸ்தை என்பது உணர்வுடன் கூடிய சமாதி, துரியாதீதம் அவஸ்தை என்பது நிர்விகற்ப சமாதி. அதனால் தான் நிர்விகற்ப சமாதியின் போது கால தேச வர்த்தமானம் அங்கு அற்று போகிறது.

       சமுத்திரத்தை ஆழம் பார்க்க உப்பு பொம்மை ஒன்று புறப்பட்டு போனது. சமுத்திரத்தினுள் சென்றதும் அது கரைந்து உப்போடு உப்பாகப் போயிற்று. இனி திரும்பிவந்து அக்கதையைக் கூறுதற்கு யார் உளர்? பிரம்மத்தைக் காண முயலுவதும் அத்தகையது.
                                    - பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

      ஜீவன் பரபிரமத்துடன் லயம் ஆகுவதே சிதம்பர ரகசியம் என்கிற சிவ ரகசியம்.

      ரிஷிகளை தேவரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி என வகைப் படுத்துகிறோம். தேவரிஷிக்குச் சான்று நாரதர், பிரம்மரிஷிக்கு சான்று சுகர், ராஜரிஷிக்கு சான்று ஜனகர்.

   
      இதில், ஜனக மஹாராஜாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. விதேஹர் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து, நல்ல அறுசுவை உணவை உண்டபின் சொகுசான மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது ஒரு கனவு தோன்றியது. ராஜ்யத்திலிருந்து எதிரி அரசனால விரட்டப்பட்ட அவர் பிச்சைக்காரன் போன்று அலைந்தார். கந்தல் ஆடை அணிந்து, பசியாலும் பட்டினியாலும் வாடி தவித்தார்: திடுக்கிட்டு விழித்தெழுந்தார். அப்போது அவர் தீவிர விசாரத்தில் ஆழ்ந்தார். அரசனாகிய நான் சிறிது நேரத்திற்கு முன்பு படாதபாடுபட்டேன். அது பொய் என்று எண்ணவே முடியவில்லை. இதில் உண்மையான நிலை எது? அரசனாகிய நான் பிச்சைக்காரனாக மாறினேனா? அல்லது பிச்சைக்காரனாகிய நான் அரசன் என்று என்னை எண்ணிக்கொண்டு மயங்கி உள்ளேனா?
இத்தைகைய விசாரணையினால் அவருக்கு இரண்டுவித அபிமானங்களும் அதாவது நான் அரசன்; நான் பிச்சைக்காரன் என்பன ஒழிந்து பிரம்ம ஞானம் அடையப்பெற்று அவர் உலக கடமைகளை சரியாகச் செய்து கொண்டிருந்தற்கிடையிலும் நிறை ஞானியாய் இருந்தார்.


பதி(ப்ரமம்), பசு (ஜீவாத்மா), பாசம் (மும்மலம்) என்பதை முதலில் அறிந்துக் கொள்ளவேண்டும்

உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்
வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவும் கெடும் பிறவிக் காடு
                       - மாணிக்கவாசகர்

     மூன்று மலங்கள் ஆணவம், கன்மம், மாயை நீக்கி நாம் இறைவனிடம் சரணாகதி அடைந்தால் தான் பிறவியில் இருந்து விடுபடுவோம்.


    அன்றே என் தன் ஆவியும்
      உடலும் உடைமை எல்லாமும்
    குன்றே அனையாய் என்னை
            ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
    இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ
            எண் தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழை செய்வாய்
            நானோ இதற்கு நாயகமே.

                                                - திருவாசகம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.