ஞான உபதேசம் செய்யும் ஞான
மூர்த்தியை பற்றி இப்போது பார்ப்போம்.
படைப்பின் கடவுளான பிரம்மாவின் நான்கு
மானஸப்புத்திரர்கள் சநகர், சநந்தனர், சனத்குமாரர்
மற்றும் சுநாத்சுஜாதர். அவர்கள் நால்வரும் நிலையில்லாத
ஜகத், ஜீவன் இவை அனைத்தும்
பொய் (நிவர்த்தி மார்கம்) என அறிந்தவர்கள். எது
உண்மை என்பதை அறிய "நான்"
எது என்று தெரியவில்லை என்பதற்காக
,சிவபெருமானகிய தக்ஷ¢ணாமூர்த்தியிடம் தந்தையின்
உத்திரவின் படி சென்றனர். அப்போது
சிவபெருமான் ஆத்ம ஞானம் புகட்டுவதாற்காக
எடுத்த அவதாரம் தான் ஸ்ரீ
தக்ஷ¢ணாமூர்த்தி அவதாரம்.
அப்போது மெளமாக இருந்து
குருபகவான் சின் முத்திரை (ஞானத்தின்
அடையாளம்) மூலம் பெருவிரலின் அடிப்பாகத்தை
ஆள்காட்டி விரல் தொடவும், ஏனைய
மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை
இது. பெருவிரல் பரமாத்மாவையும் ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவையும் குறிக்கிறது.
இதில் நடுவிரல் ஆணவத்தையும், மோதிர விரல் கன்மத்தையும்,
சுண்டு விரல் மாயையையும் குறிக்கும்
என்பதை ஆத்ம வித்தியை புகட்டினார்.
இதனால் தான் தீர்த்தம் வாங்கும்
போது தத்துவத்தை நினைவுப்படுத்தி சின் முத்திரையில் நாம்
தீர்த்தம் வாங்குகிறோம். தென்முகம் நோக்கி குருபகவான் இருப்பதால்
தான் வடக்கு நோக்கி தியானம்
செய்கிறோம். இதில் குரு பகவான்
வலது காலால் மிதிக்கும் அரக்கன்
"அபஸ்மரா" (அறியாமை)
இந்த உண்மைத் தத்துவம்
தெரியாமல் சிலர் நவகிரகத்தில் இருக்கும்
குரு இவர் என்று தவறாக
புரிந்துக் கொள்கிறார்கள். இக்கால கட்டத்தில் கண்டிப்பாக
இதனைப் புரிந்துக்கொண்டு தோஷம் நிவர்த்தி பண்ணுவதாக
கூறும் ஜோதிடர்களிடம் இருந்து பணம் விரையமாகாமல்
நம்மை பாதுகாத்துக்கொள்ளவும்.
நம் வினைகளை மூன்று
விதமாக பிரிக்கலாம். இவை ஸஞ்சிதம், ஆகாமியம்
மற்றும் பிராரப்தம் எனப்படும்.
ஸஞ்சித வினை என்பது
பல பிறப்புகளில் வங்கியில் போட்ட சேமிப்பு தொகை
(நல்வினை, தீவினை) எனப்படும்.
பிராப்த வினை என்பது
இப்பிறப்பில் பல பிறவிகளில் சேமித்த
சேமிப்பு தொகையை எடுத்து செலவு
பண்ணுவது.
ஆகாமிய வினை என்பது
இப்பிறப்பில் தொகையை வங்கியில் சேமிப்பதற்காக
செலுத்த இருப்பது. இதில் வரும் வட்டி
(Interest) என்பது மறு பிறப்பு. சேமிப்பு
தொகையை (Deposit Amount) முழுவதும் செலவு பண்ணினால்தான் வட்டி
(பிறப்பு) என்பது இல்லை.
ஆன்ம ஸாக்ஷ¡த்காரம்
கிட்டும் போது ஸஞ்சிதமும் ஆகாமிபமும்
அழிந்து விடும். பிராப்த வினையானது
அனுபவிப்பதால் மட்டுமே அழியும்.
சிலர் இந்த பிராப்த
வினையை சில பரிகாரம் மூலம்
நிவர்த்தி பண்ணுவதாக கூறி மக்களை தங்களுக்கு
சாதகமாக்கி அவர்கள் உடமைகளை பறிக்க
சில சூழ்ச்சிகளை பகிரங்கமாக நிகழ்த்தி வருகின்றனர். இதனால் அவர்களை மேலும்
துக்கப்படுத்தி விடுகின்றனர். இதை ஒரு உபமானக்கதை
கொண்டு பார்ப்போம்.
தவளை ஒன்று கழுகிடம்
எங்கள் இனத்தை பாம்பு இரையாக்கி
கொள்கிறது. நான் இதனிடம் இருந்து
தப்பிக்க ஏதேனும் வழி உண்டா?
என்றது. தவளையையும் பாம்பையும் அபகரிக்க திட்டமிட்டு, தவளையிடம் "நீ வாயால் சப்தம்
போட்டுக் கொண்டு இரு", என்றது.
இதைக் கேட்ட மகிழ்ச்சியில் தவளையும்
சப்தம் போட கழுகு மேலே
பறக்கலாயிற்று. அச்சமயம் பார்த்து தவளையை பிடிக்க பாம்பும்
வந்தது. அப்பொழுது கழுகு கீழே வந்து
பாம்பையும் தவளையையும் இரையாக்கி கொண்டது. கழுகு மேலே பறப்பதாக
இருந்தாலும் அதன் பார்வை கீழே
இரையை நோக்கி தான் இருக்கும்.
அதே போல சிலர் மேலானவர்கள்
போல் தென்பட்டாலும் அவர்களது இயல்பு கீழானதே ஆகும்.
யஜுர் வேதத்தில் அஸ்வமேத
யாகம். புத்திர காமேஷ்டி யாகம்,
வாஜபேய யாகம், ராஜஸ¤ய
யாகம், முதலிய முப்பது வகையான
யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பல பலன்களை அடைய
ரிக், யஜுர், ஸாமம், அதர்வண
என்னும் நான்கு வேதங்களில் பல
வழி முறைகளை பகர்ந்துள்ளது. இதனை
முறையாக கூறியபடி அனுஷ்ட்டித்தால் முழுமையாக நினைத்ததை நினத்தபடி அடையலாம்.
ஆனால் நாம் வேதத்தின்
( கர்மகாண்டம்) இருந்து வேதாந்தத்துக்கு (ஞான
காண்டம்) போக முற்பட வேண்டும்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.