Friday, 20 February 2015

☼17-விழியும் வழியும்-17☼ - ‍‍நீ குற்றம் காணாதே(இதில் வியப்யொன்றுமில்லை) ۞தாஸோஹம் பிரபு۞

         சிலர் எதிர் பார்க்காத வண்ணம் ஏதோ ஒன்று நேர்ந்தால் அவர்களின் முன்னோர்கள் மீது பழி சுமத்திக் கொள்வதின் மூலம் கெட்டிகாரத்தனமாக தப்பித்துக் கொள்ள முற்படுகிறார்கள். முன்னோர்களே பொருப்பு என்று வைத்துக்கொள்வோம், உங்கள் வினைக்கு ஏற்பதான் அவர்கள் பரம்பரையில் வந்து வாய்க்கிறீர்கள் . இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, அதனால் அவர்களை குறை கூறுவது மட்டும் சரியல்ல உங்களுக்கு எது நேர்ந்தாலும் நீங்களே பொறுப்பாளி.

        நீங்கள் அனுவவிக்கின்ற இன்பங்களும் துன்பங்களும் எதுவானாலும் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கும் உங்கள் சுற்றத்துக்கும் நடக்கும் அனைத்திற்கும் முதல் காரணம் நீங்கள் தான் என்று முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். நடந்ததையும் நடக்கப்போவதையும் உங்கள் வினையே தீர்மானித்து நடத்துகிறது. ஆதலால் குற்றம் காண்பதற்கு இங்கு எதுவும் இல்லை.

உனக்கு மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் நீ குற்றம் காணாதே.
                        _ தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்

        பிறரிடமும் தன்னிடமும் குறையைப் பார்க்காமல் எவன் ஒருவன் அனைத்தையுமே நிறைவாக பார்த்து ஆத்மாவுடன் பிரியத்தை ஏற்படுத்துகிறானோ அவனுக்கே ஆன்ம விடுதலை. அவரைத்தான் நாம்

" ஸ்திதப் பிரக்ஞன்" என்று சொல்கிறோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.