Saturday, 31 January 2015

☼10-விழியும் வழியும்-10☼ - ‍‍குரு பக்தி ۞தாஸோஹம் பிரபு۞


குரு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்று எப்படி அறிவது? இவர் உண்மையான குரு தானா? என்று பெறும்பாலோர் கேட்கின்ற கேள்வி, ஆனால் உண்மையான பக்தனுக்குரிய இலக்கணத்தை யாரும் கேட்பதில்லை காரணம் அதில் கேட்டவர் மாட்டிக் கொள்வார்!
     
       திருவண்ணாமலை திருத்தலத்தில் நமசிவாயர் என்ற மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் குகையில் வாழ்ந்த படியால் அவரை அனைவரும் "குகை நமசிவாயர்" என்றே அழைத்தனர். இவா¢ன் சீடர் பெயரும் "நமசிவாயர்". குருவான குகை நமசிவாயர் சீடனான நமசிவாயா¢ன் குரு பக்தியை சோதிக்க விரும்பினார். அதன்பின் குரு தன் வாந்தியை பானையில் எடுத்து அப்பானையை சீடனிடம் கொடுத்து, "நீ என்னுடைய வாந்தியை யாரும் காலில் மிதிக்காதபடி ¡¢டத்தில் கொட்டிக்கொண்டு வா" என்று சொல்லி பானையை கொடுத்து அனுப்பி வைத்தார். குருவின் உத்திரவுபடி சீடனும் பல இடங்களில் முயன்று தேடி பார்த்தார் ஏற்ற இடம் சீடருக்கு கிட்டவில்லை. பின்பு எப்படியோ சீடனும் குரு  சொன்னார் போல செய்து முடித்து வெறும் பானையுடன் தன் குருவிடம் திரும்பினார். நான் சொன்னபடி எவ்வாறு செய்தாய் என்று குரு கேட்டார். அதற்கு சீடன் பணிவுடன் எங்கு கொட்டினாலும் பூமியில் தான் இதனை கொட்ட முடியும் கொட்டினால் மனிதர்கள் கண்டிப்பாக காலில் மிதிக்க வாய்ப்பு உண்டு. பூமியில் குழி தோண்டி இதனை கொட்டிய பின்பு மண் போட்டு மூடினாலும் கூட நாய் போன்ற விலங்குகளால் காலால் குழி பா¢த்து மிதிக்க வாய்ப்பு உண்டு. ஆதலால் நானே இந்த அமிர்தத்தை குடித்துவிட்டேன். மிதித்தாலும் என் வயிற்றைத்தான் மிதிக்க வாய்ப்பு உண்டு என்றார். இதன் மூலம் குருவின் அருளுக்கு பாத்திரமான நமசிவாயர், "குரு நமசிவாயர்" என்று குருவின் ஜீவிதம் இருக்கும் போதே தம் குருநாதரான குகை நமசிவாயரே திருநாமத்தை சூட்டினார். இந்த உண்மை சம்பவத்தின் மூலம் சீடனுக்கு¡¢ இலக்கணத்தை அறியப்பெறலாம்.
      
        ஆதனூர் என்ற கிராமத்தில் நந்தனார் என்ற கீழ் சாதியை சேர்ந்தவர் வாழ்ந்து வந்தார். அவர் தன்னுடன் பதினோரு பேர் கொண்ட கீழ் சாதியினரை திருப்புன்கூ¡¢ல் உள்ள சிவாலயத்துக்கு அழைத்துச் சென்றார். அக்கால கட்டத்தில் கீழ்சாதியினர் கோயிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை என்பதால் வெளியே நின்று சிவலோகநாதா ! பொ¢ நந்தி ஒன்று உன்னை மறைத்துப் படுத்திருக்கிறது. அது எங்களுடைய பழைய வினையானது ஒன்று சேர்ந்து நந்தியாக வடிவெடுத்து உன்னை மறைக்கிறது. கோயிலுக்கு உள்ளே வராவிட்டாலும் தேரடியில் நின்று உன் தா¢சனம் கிடைத்தால் போதும். உன்னை மறைத்துப் படுத்திருக்கும் நந்தி ஓர் அடி விலகினால் போதும் உன் தா¢சனத்தைப் பெறலாம் என்று நந்தனார் வேண்ட நந்தி விலகியது. சிவனின் திருக்காட்சியும் கிட்டியது. பின்பு திருப்புன்கூர் ஆலயத்தின் பின்புறத்தில் குளம் வெட்டும் திருப்பணியில் ஈடுபட்டு ஊர் திரும்பலாயினர். அங்கு நந்தனார் ஊர்மக்களிடன் சிவன்பால் பக்தியை செலுத்த சொன்னார். மேலும் தில்லை அம்பலத்தின் மகிமைகளை எடுத்து உரைத்ததன் பலன் நந்தனார்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி ஊர்ப்பொ¢யவரை அறிவுரை கூற அழைத்தார்கள் பொ¢யவர் அவ்வாறே அறிவுரை கூற நந்தனார் ஏது நிலையில்லாதது நிலையானது என்று எடுத்துரைத்தார். அக்கணமே பொ¢யவர் நந்தனார் காலில் விழுந்து வணங்கினார். பின்பு, அப்பொ¢யவர் பன்னிரெண்டாவது பக்தராக மாறிவிட்டார். அவ்வூ¡¢ல் தினமும் பஜனை முதலிய சிவ சம்பந்தமான பல வழிபாட்டு முறைகள் நடைப்பெறலாயிற்று. நந்தனார் அந்தணா¢டம் சிதம்பரத்தைக் கண்டால் பிறவிப்பிணி போகும் எனக்கு சிதம்பரத்தை காண அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கு அந்தணர், "சிதம்பர தா¢சனம் சித்தர்களுக்கே சாத்தியம். உனக்கு அது சாத்தியமில்லை. யோகிகளும் தவசிகளும் தேடிக் கண்டறியாச் சிவபதத்தை உன்னால் சேவிக்க இயலுமா? போய் உன் வேலையை பாரடா! "சிதம்பரம் சிதம்பரம்" என்று பித்துப் பிடித்து அலையாமல் வேலையைப்பாரடா! என்று வேதியர் அதட்டிவிட்டார். பின்பு நாற்பது வேலி பூமியில் பயிரை நட்டாக வேண்டும், அது விளைந்து அதனை நீ காப்பாற்றியாக வேண்டும். விளைச்சலை எடுத்து கொட்டத்திற்கு எடுத்து சேர்த்தாக வேண்டும் என்றார். பின்பு நீ சிதம்பரத்துக்கு போகலாம் என்றார். அதன்படி நந்தனார், ஏர் உழுதுக்கொண்டே நடராஜா ! நடராஜா ! தில்லை நடராஜா !!! திருச்சிற்றம்பலம் காண்போம் என்று சிவனின் திருநாமத்தை கூறிக்கொண்டு காளைமாடுகளே ! நான் தில்லை போக உதவுங்கள் மார்கழித் திங்கள் திருவாதிரை வரப்போகிறது அப்போது சிதம்பரத்தில் உள்ள அம்பலவானனை நான் சேவிக்க வேண்டும் என்று கூறியபடி வயலை உழுதாக்கி விட்டார். அப்போது மாட்டு வண்டியில் சிதம்பர நாதரை காண ஒரு குடும்பம் பயணித்து அவ்வழியில் சென்றது. நந்தனார் அவர்களைப் பார்த்து நான் மார்கழித் திங்கள் திருவாதிரையில் சிதம்பர நாதரை சந்திக்கிறேன் என்று கூறுங்கள் என்றார். ஒரே நாளில் நாற்பது வேலி உழவு நடுவது யாரால் இயலும் என்று அந்தணர் கேட்க, சிதம்பரநாதருடைய
திருவிளையாடல் அய்யா இது ! நான் ஒன்றும் செய்யவில்லை. சிதம்பரம் சென்று தில்லை நாதருடைய தா¢சனம் பெறவேண்டும். தில்லையை நான் ஒரு நாளும் மறக்க முடியாது. தில்லை போக தடை போடாதீர்கள். தடை போட்டால் என் உயிர் போய்விடும் என்று கூற, என்ன பிதற்றுகிறாய் ! உனக்கு சவுக்கடி விழும் என்று நந்தனாரை மிரட்ட, அப்படியே செய்யுங்கள் என்றார் நந்தனார். பின்பு கோபமாக அந்தணர், நெல் விளையாது சிதம்பரம் போக முடியாது என்று கூறியபடியே வில்வ மரத்தில் நந்தனாரை கட்டி சவுக்கில் அடிக்கும் போது நந்தனார், " அடியுங்கள் சுவாமி ! நன்றாக அடியுங்கள். உடல் செய்த பாவத்துக்கு உடல் அடிவாங்கட்டும். என் உள்ளமோ சிதம்பரத்துக்கு போய்விட்டது. தில்லை நாதரை கண்டு ஆனத்திக்கிறது. சிவாய நமஓம் ! ஓம் நமசிவாய !! என்று சிவ நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்திவிட்டார். பின்பு, அந்தணர் வீட்டிற்குச் சென்று உறங்கலானார். அப்போது நந்தனார் சிதம்பரநாதா¢ன் நினைவில் மூழ்கியவராய் இருக்கையில், சிவபெருமான் நந்தனார் கனவில் தோன்றி உன் பாபம் தீர்ந்துவிட்டது, விரைவில் தில்லை வருவாய். இந்த ஜென்மத்தின் பயனை அடையப்பெறுவாய் ! பூமியில் நெல் விளைந்து அந்தணர் வீட்டில் மூட்டை மூட்டையாக குவிந்து விட்டது. அந்தணரே வந்து உனக்கு அனுமதி தருவார். பின்பு உன் அடியார்களுடன் நீ தில்லை வருவாய். தில்லைவாழ் அந்தணர்கள் உன்னை பூரண கும்பத்துடன் உள்ளே உன்னை தா¢சிக்க அழைப்பார்கள். அவர்கள் ஞானாக்னியை மூட்டுவார்கள், அதில் அக்ஞான சா£ரத்தை அழித்துவிட்டு ஞான சா£ரத்துடன் என்னுடன் கலந்துவிடுவாய்.

        பின்பு சிவபெருமான் அந்தணர் கனவில் தோன்றி என் பக்தன் நந்தன் சதா காலமும் என் நினைவில் இருப்பவன், நீ விரும்பும் போகப்பொருள் நெல் மூட்டையாக உன் வீட்டு கட்டுத்தரையில் குவிந்து விட்டது. நந்தனார் இருக்குமிடத்தில் விரைந்துச் சென்று தில்லை வர விரைவில் அனுமதியளித்து அனுப்பிவை. பக்தனுக்குச் செய்யும் துன்பம் எனக்கு செய்யும் துன்பம் ஆகும். பக்தனை அடித்தாய் அல்லவா ? அந்த அடியின் தழும்பை என் முதுகில் பார் என்றார். அதன்படி அந்தணர் நந்தனா¡¢டம் சென்று தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு நந்தனா¡¢ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சிறியேனாகிய நான் செய்த பிழையை சிவ பக்தராகிய நீர் பொறுத்தருள வேண்டும் என்று கூறி, " இட்டார் பொ¢யோர் " என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்ந்தேன் என்றார். பின்பு அடியாருடன் நந்தனார் கையில் வீணையுடன் " ஓம் நமசிவாய " என்று சிவ நாமத்தை கூறிக் கொண்டு தில்லையைச் சுற்றிவந்து தெற்கு குளக்கறையை அடைந்தார்.

        அங்கு பன்னிரெண்டு தில்லைவாழ் அந்தணர் கனவில் சிவபெருமான் தோன்றி என் பக்தன் நந்தன் " திருநாளைப் போவேன் , திருநாளைப் போவேன் " என்று ஓயாது சொல்லிக் கொண்டிருந்ததால் "திருநாளைப் போவார் " என்று பெயரும் பெற்றுள்ளான். என்னைக் காண உள்ளே வராமல் கீழ்சாதி என்று பயந்து கோயிலுக்குள் வராது தெற்கு குளக்கரையில் துடியாய் தன் அடியாருடன் துடித்துக்கொண்டு இருக்கிறார், அவரை மா¢யாதையுடன் பக்தி சிரத்தையுடன் அழைத்து ஆலையத்துக்கு முன் அக்னியை மூட்ட வேண்டும், அதில் அவர் பிரவேசம் செய்வார். அக்னியில் பிரவேசம் செய்யும் நந்தனார் வடிவில் நடராஜ மூர்த்தி தாமே காட்சி தருவேன், என்று கூறி உத்தரவிட்டுச் சென்றார்.
        அதன்படி நந்தனா¡¢டம் நடந்ததைக் கூறி தில்லை வாழ் அந்தணர்கள் காலில் விழுந்து வணங்கி தில்லை நடராஜா¢ன் உத்தரவுபடி அக்னியை மூட்டினார்கள். அப்போது நந்தனார் ஹரஹர மகாதேவா ! சம்போ சதாசிவா ! என்று கூறியபடியே பரமானந்தத்தை உணர்ந்தபடியே "யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுவதாகுக " என்று கூறினார். பஞ்ச பூதத்தால் ஆன உடலை பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய அக்னிக்குக் கொடுக்கிறேன். இனி பரமனுக்கு¡¢ உடல் வந்தமைவதாகுக. அக்னியில் இடும்பொருள் தூய்மையடைகிறது. இந்த பூத உடலைத் தூய்மைப் படுத்துவது அக்னிக்கே சாத்தியம், இவ்வாறு கூறிக்கொண்டு நந்தனார் அக்னியை வலம் வந்து கைகூப்பி வணங்கி அக்னியில் புகுந்து ஆனந்தமாக வெளியே வர அப்போது அனைவரும் நந்தனார் காலில் விழுந்து வணங்கி துதி செய்தனர்.

       நந்தனார் சிவனை வணங்கியதால் சிவ சாயுஜ்யம் பெற்றார், காரணம் நந்தனார் சிவனுக்கு பக்தனானார், பின்பு ஊர் மக்கள் நந்தனாருக்கு பக்தனானார்கள். இதுவே பக்தனின் சிறந்த பெருமையை எடுத்துரைக்கிறது.

    பக்தனின் மாண்பை ஒரு உபமான கதையின் மூலம் விளக்குகிறேன்.     
      தாய் ஒருத்தி கொள்ளி கட்டையை எரித்து தண்ணீரை கொதி படுத்திக் கொண்டு இருக்கிறாள். அச்சமயம் பார்த்து அவளது மகன் மண்ணெண்ணை ஊற்றுவேன் என்று விளையாட்டுத்தனமாக நெருப்பினுள்ளே ஊற்ற முற்படுகிறான். இதனால் நிகழவிருக்கும் ஆபத்தை புரிந்துத் கொண்ட தாய் ஊற்றாதே என்று மறுப்பு தெரிவித்துக் கொண்டே வெப்ப படுத்திய கொள்ளிக்கட்டையை எடுத்து அவன் முன் காட்டுகிறாள். இதில் அவன் மனம் கலங்கவில்லை , பயப்படவில்லை , காரணம் கட்டையில் தான் நெருப்பு இருக்கிறது ஆனால் தாய் பாசத்தில்  குளிர் இருக்கிறது! இதில் கொள்ளிக்கட்டையில் இருந்த தனல் சூட்டைத்தான் உணர்ந்தான். அவன் தாய் கட்டையை காண்பித்தாலும் காண்பிக்காட்டியும் அடுப்பில் இருக்கும்போது கூட அதே தனல் சூட்டை தான் உணர்ந்து இருக்க முடியும். இதேப்போல் தான் பக்தனுக்கு வரும் துன்பம், அவன் மனம் ஒரு சஞ்சலத்தையும் ஏற்படுத்தாது. மனதை எந்த காரணத்தைக் கொண்டும் சஞ்சலமாக விடக்கூடாது என்பது தான் ஆனந்தத்துக்கு முதல் படி.

இப்போது நாம் குரு அடைந்த நிலையை பார்ப்போம்.

      " ஒருவரைப் பார்த்தவுடன் அவர் உயர்ந்த நிலையை எய்தியுள்ளார் என்று எப்படி அறிவது?" என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் குரு தாரக் மஹராஜ் என்கிற ஸ்ரீ மஹாபுருஷ மகராஜ் அவர்களிடம் கேட்டபோது "உனது மனம் அவரது சன்னதியில் எப்படி இருக்கின்றது என்று பார். உள்ளத்தே ஆனந்தமும், அமைதியும் குடிகொண்டால் அவர் பெரிய மூர்த்தி என்று உணரலாம்" என்றார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.