யோகத்தில் எட்டு வகை இருக்கிறது
அவையே அஷ்டாங்க யோகம். இதில் இயமம்,
நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகாரம்,
தாரணை, தியானம் மற்றும் சமாதி.
இப்போது தியானம், பிராணாயாமத்தின்
சக்தி வாய்ந்த செய்யும் நுட்ப
முறையை பார்ப்போம்.
தியானம் செய்யும் போது
கண்களை மூடிக்கொள்ள முடியும் என்பதால் கண்களை மூடிக்கொள்கிறோம். ஏனைய
உருப்புகளை உருப்புகளால் மூடிக்கொள்ள முடியாததால் அதனை முழுதும் மட்டுப்படுத்தவேண்டும்.
இந்த இயல்பான நிலை மூலம்
தன்னை உணரவும் மற்றும் தன்னை
உண்மை நிலையில் நிருத்திக்கொள்ளவும் தியானம் ஏதுவாக வந்து
அமைகிறது.
முதலில் திருநீரை இட்டுக்கொள்ளவும்,
பின் தீபமேற்றி வைக்கவும், அடுத்த படியாக வெறும்
தரையில் உட்காராமல் ஏதோ ஒரு விரிப்பை
பயன்படுத்தி உட்கார வேண்டும். பின்
கையை ஏந்தியபடி காலில் வைக்கவும் (கையில்
திருவோடு, வில்வங்காய் அல்லது வாழைப்பூவின் செவ்வோடு
இருந்தால் நல்லது).பின்பு முதுகு
தண்டு நேராக இருக்கும் படி
பார்த்துக் கொள்ளவும். தலையை மிக சிறிதளவு
மேலே தூக்கவும். அப்போது ஆத்ம ஆனந்த
ஜோதி பிரகாசமாக இருப்பதாக புருவ மத்தியில் பாவித்துக்
கொண்டு "ஓம் தத் சத்"
என்பதை நாக்கு அசையாமல் மெதுவாக
எண்ண வேண்டும். அல்லது தலையை மிக
சிறிதளவு கீழே சாய்க்கவும். அப்போது
ஆத்ம ஆனந்த ஜோதி பிரகாசமாக
இருப்பதாக ஹிருதயத்தில் (நெஞ்சுக் குழியில் இரண்டு விரற்கடைக்கு வலது
புறம்) பாவித்துக் கொண்டு "ஓம் தத் சத்"
என்பதை நாக்கு அசையாமல் மெதுவாக
எண்ண வேண்டும். இறுதியாக அதீத நிலைக்குச் செல்ல
வேண்டும்.
மூலாதாரம் (gonads) என்னும் சக்கரத்தில் 6 மணி
முதல் 6.40 மணி வரை 600 சுவாசமும்
சுவாதிஸ்டானத்தில்
(prostract glands) 6.40 மணி
முதல் 13.20 மணி வரை 6000 சுவாசமும்,
மணிபூரகத்தில் (adrenal
glands) 13.20 மணி முதல் 20.00 மணி வரை 6000 சுவாசமும்
, அனாகதத்தில் (pancreas)
20.00 மணி முதல் 2.40 மணி வரை 6000 சுவாசமும்
விசுத்தியில் (thyroid
glands) 2.40 மணி முதல் 3.47 மணி வரை 1000 சுவாசமும்
ஆக்கினையில் (pitutary
glands) 3.47 மணி முதல் 4.53 மணி வரை 1000 சுவாசமும்
சகசிராரமில் (peneal
gland) 4.53 மணி முதல் 6.00 மணி வரை 1000 என்ற
விதத்தில் நமது உடலில் ஒரு
நாளைக்கு 21,600 சுவாசங்கள் நடைபெறுகிறது. அதில் 14,400 சுவாசங்களைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். மீதியுள்ள
7,200 சுவாசங்களை வீணாக்குகிறோம். இதனால் தான் சிதம்பரம்
நடராஜர் கோயிலில் 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 72,000 ஆணிகள்
அறையப்பட்டு உள்ளன். இது மனிதருக்குள்
72,000 நாடிகள் ஓடுகின்றன என்பதை குறிக்கிறது. இதில்
மூலவர் கருவரை, இதயம் நமக்கு
இடது பக்கம் இருக்கிறது போல
கோயிலில் சற்று தள்ளி இடதுபக்கம்
இருக்கிறது, அம்பலத்தானின் திருநடனமே இதயத்துடிப்பு. கோயிலில் உள்ள ஐந்து பிரகாரங்கள்
நமது உடலில் உள்ள பஞ்ச
கோசங்களை குறிக்கிறது. இக்கோயில் உலகத்தில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. சரப்பயிற்சியின் மூலம் வீணாகும் சுவாசத்தை
ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
"ஓம்
நமசிவாய சிவாயநம ஓம்" என்ற
எண்ணத்தின் மூலம் 12 அங்குல காற்றை உள்ளே
இழுக்கவும்.
"ஓம்
தத் சத் ஓம்" என்ற
எண்ணத்தின் மூலம் 4 அங்குல காற்றை
நாசம் செய்ய வேண்டும்.
"ஹரி
ஓம் நமோ பகவதே நாராயணாய
நம" என்ற எண்ணத்தின் மூலம்
16 அங்குல காற்றை வெளியே விட
வேண்டும்.
பிராணாயாமம் பயிற்சி சில விதிமுறையுடன்
கண்டிப்பாக தக்க குரு மூலமாய்
தெரிந்து செய்ய வேண்டும். இக்கால
கட்டத்தில் குரு கிடைக்க பெறாதவர்கள்
இம்முறையை பயன்படுத்தலாம்.
முதலில்
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க
வேண்டும், வலது பக்கம் மூக்கை
கட்டை விரலால் அடைக்க வேண்டும்.
அப்படி இழுத்த காற்றை லேசாக
இடதுபக்கம் விடவேண்டும். பின்பு இடது பக்கம்
மூக்கை நடு விரலில் அடைத்து
வலது பக்கம் காற்றை உள்ளே
இழுத்து அப்படி இழுத்த காற்றை
லேசாக வலது பக்கமே விடவேண்டும்.
இது ஒரு சுற்று. முதல்
வாரம் ஒரு முறை, இரண்டாம்
வாரம் இரண்டு முறை, மூன்றாம்
வாரம் மூன்று முறை, நான்காம்
வாரம் நான்கு முறை என்ற
விதத்தில் செய்ய வேண்டும். இதற்கு
மேலே அதிகமாக செய்தால் உடல்
நிலை கெட்டுவிடும். சரப்பயிற்சியின் சாரம் இதுவே.
உடலின் மூல ஆற்றல்
உடலெங்கும் 72,000 நாடிகள் வழியாக பரவுவதாக
சித்தர்கள் கண்டு கூறியுள்ளனர். தவறாக
பிராணாயாமம் செய்தால் இதன் செயல்பாடு மாறிவிடும்.
வேறு உபாயம் என்னவென்று பார்த்தால்
அக்கால கோயிலுக்குச் சென்று கருவரையில் உள்ள
மூர்த்தியை வணங்கும் போதும் பிரகாரங்களில் (பஞ்ச
கோசங்கள்) உள்ள ஏனைய மூர்த்தியை
வணங்குவதற்கு செல்லும் போதும் கோயிலுக்குள் உள்ளே
செல்லும் போதே மூல கடவுளின்
திருநாமத்தை மட்டும் மனதில் நினைத்துக்கொண்டு
தண்ணீர் குடத்தை எடுத்து பொறுமையாக
நடக்கும் நிரைமாத கற்பினியைப் போல்
பொறுமையாக நடப்பதால் இயற்கையாக பிராணாயாமம் நடக்கும். அப்போது வேறு ஏதோ
உலக சிந்தனையும் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை ஒட்டு
கேட்கும் அல்ப்ப புத்தியோடும் கூட
வருபவர்களிடமும் செல்போனில் பேசிக் கொண்டும் விரைவாக
செல்வதனால் உங்கள் உடம்பில் பிராணாயாமம்
தவறாக நடந்து பல பாதிப்புகள்
விரைவில் நடக்க வாய்ப்பாக அமையும்.
கோயிலுக்கு சென்றால் அமைதியும் ஆனந்தமும் ஏற்படுத்தி பல மடங்கு அமைதியும்
ஆனந்தத்தையும் பெற முயல வேண்டும்.
அங்கு குறை காண்பதும் மற்றவர்களுக்கு
இடஞ்சல் பண்ணுவதும் அசுத்தம் செய்வது போன்றதை
விட்டு தன் ஆன்ம பலத்தை
கூட்டிக் கொள்ள வேண்டும்.
சிவபெருமானுக்குரிய தலங்களில் ஆறு ஆதாரங்களுக்கு உரிய
ஐம்பூதங்களுக்கு உரிய தனித்தனி தலங்கள்
உண்டு.
மூலாதாரம்
: திருவாவினன் குடி
சுவாதிஸ்டானம்
: திருவானைக்காவல் (நீர்)
மணிப்பூரகம்
: திருவண்ணாமலை (அக்னி)
அனாகதம்
: சிதம்பரம் (ஆகாசம்)
விசுத்தி
: காளஹஸ்தி (காற்று)
காஞ்சி (நிலம்)
ஆக்கினை
: காசி
ஆனால் வெள்ளிங்கிரிப் பெருமான் "பஞ்சலிங்கேஸ்வரர்"
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.