Saturday, 31 January 2015

☼09-விழியும் வழியும்-09☼ - அ+உ+ம்="ஓம்" ‍‍۞தாஸோஹம் பிரபு۞


உலகமே அதிர்வான ஒலியின் மூலம் இயங்கிக்கொண்டு இருக்கிறது அதனால் தான் இறைவனே நாத பிரம்மம் எனப்படுகிறான். ++ம் என்பதே "ஓம்" அதிர்வு இந்த ஒலி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. அதனால் தான் இறை தன்மை பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. '' என்னும் எழுத்து படைக்கும் கடவுளான பிரம்மனையும், '' என்னும் எழுத்து காக்கும் கடவுளான விஷ்ணுவையும், 'ம்' என்னும் எழுத்து அழிக்கும் கடவுளான ருத்திரனையும் குறிக்கிறது.

            ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
            ஓங்காரத் துள்ளே உதித்த சராசம்
            ஓங்கார தீதத்துயிர் மூன்றும் உற்றன
            ஓங்கார சீவ பரசிவ ரூபமே
                                                            _ திருமூலர்

        விதவிதமான ஒலிகளை பல்வேறு இடங்களில் கேட்டாலும் அவை அனைத்தும் "ஓம்" ஒலி கலந்த ஓசைகள்தான். "ஓம்" பிரணவ மந்திரத்தின் அக்ஷரத்தை சரியாக உச்சரிப்பதன் மூலம் பிரபஞ்சத்துடன் ஒன்றி இயங்க இயற்கை வழிவகுக்கிறது. நாம் 'ஓம்" என்று முறையாக சொல்லும்போது வாய்யை எவ்வாறு அசைக்கிறோமோ அவ்வாறே பிரபஞ்சம் இறைகையாக அவ்வசைவின்படிதான் இயங்குகிறது.

             அகார காரணத்திலே அநேக ரூபமாய்
             உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
             மகார காரணத்திலே தெளிந்தது சிவாயமே.
                                                                  _ சிவவாக்கியர்

       எந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பும் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை முதலில் சொன்னால் பிரபஞ்சத்துடன் நாம் இயற்கையாகவே இணைய வாய்ப்பாக அமையும். மந்திரம் சொல்லி முடிந்தான பிறகு ஓம் சாந்தி சாந்தி சாந்தி : (ஆதி ஆத்மீகம், ஆதி பெளதீகம், ஆதி தெய்வீகம்) என்று சொல்வதன் மூலம் துஷ்ட அதிர்வுகள் நம்மை தாக்காத படி ஒத்து போக வாய்ப்பு ஏதுவாக அமைகிறது. அப்படி சொல்லாமல் விடுவது மந்திரத்தின் நிறைவு இல்லை நிறைவு பெறாத மந்திரத்துடன் அடுத்து நாம் செய்ய போகும் உலக விஷியங்களைப் பற்றிக்கொண்டு வேறு ஏதோ கெடுதல் (பலன்) உண்டாக்கிவிடும்.

      "மந்திரம்" என்றால் மனதின் திரம். மனதை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் மந்திரத்தை பல எண்ணிக்கையில் உச்சரிப்பதன் மூலம் நினைத்ததை அடையமுடியும். 51 ஸம்ஸ்க்ருத்தின் அக்ஷரங்கள் தேவியின் உடல் பாகமாக அமைவதால் பல விதத்தில் சக்தி பெற வழிவகுக்கிறது. அக்ஷரம் என்றால் அழிவற்றது என்று பொருள். அக்ஷரத்தை சரியில்லாமல் உச்சரிப்பதால் அழிவு (க்ஷரம்) தானாக வந்து அமைகிறது. மனதில் பொறுமையாக அக்ஷரத்தை நினைத்து சரியான பதத்தில் சொன்னால் இதன்மூலம் நமக்கு மந்திர காப்பை அமைத்துக்கொள்ள முடியும்.

             அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
             மகாரம் மனம் சித்தம் விந்துப் - பகாது
             நாதம் உள் வடிவாம் நாடில் பிரணவமாம்
                                                            - சிவஞான போதம்

      ஓங்காரம் என்பது தான் பிரணவம். அகர, உகர, மகர எழுத்துக்கள் சேர்ந்த ஒலி "'ஓம்". இந்த பிரபஞ்சத்தில் அகரம் தோற்றத்துக்கும், உகரம் இருப்புக்கும், மகரம் ஒடுக்கத்துக்கும் அண்டத்தில் எங்கும் இடையறாது ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.