அனைத்தும் பிரம்மம் தான், அதற்காக அனைத்து வஸ்த்துக்களையும் ஒரே விதத்தில் கையாளக்கூடாது.
இதிகாசப் பூர்வமாக நிகழ்ச்சியின் உட்கருத்து ஒன்றை பார்ப்போம்.
அவதார மூர்த்திகளில் பிரபு ஸ்ரீ ராமரும் ஒருவர். வனத்தில் இருந்தபோது, ஆசையினால் மாயை மானை சீதா தேவி கேட்டதின் பொருட்டு மானை பிடிக்க பிரபு ஸ்ரீ ராமர் செல்கையில் லட்சுமனிடம் சீதா தேவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டுச் சென்றார். பல நிகழ்வுக்கு பின்பு இராவணனிடம் போராடி வெற்றிப்பெற்று சீதையுடன் அரண்மனைக்கு வந்த பிறகு பிரபு ஸ்ரீ ராமர் லட்சுமனனிடம் சீதா தேவியை வனத்தில் விட்டு வரும்படி உத்தரவிட்டார்.
இவ்விரண்டு நிகழ்ச்சியில் பிரபு ஸ்ரீ ராமர் என்னும் பரபிரம்மம் தான், இரண்டாவது நிகழ்ச்சியில் இருக்கும் பிரபு ஸ்ரீ ராமரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்தில், படைத்ததை துணைக்கொண்டு படைத்தவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
இந்த பிரபஞ்சத்தில், காப்பதை துணைக்கொண்டு காப்பவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
இந்த பிரபஞ்சத்தில், அழிந்ததை துணைக்கொண்டு அழிப்பவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
ஜென் துறவி ஒருவரிடம் அவர் சீடர், "விவாதத்தாலும் வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.
"நிழல் என்னவென்று பார்வையற்ற ஒருவனுக்கு விளக்கும் முயற்சி போன்றது " என்றார் குரு.
ஒன்று அவர்களாக அறிந்துக்கொள்ள முற்பட வேண்டும் (யுக்திப் பிரமானம்) இல்லையெனில் சாஸ்த்திரத்தை நன்கு அறிந்த குரு மூலம் அறிந்து (சுருதிப் பிரமானம்) ஒப்புக்கொள்ள வேண்டும். இதுயெல்லாம் விட்டு விட்டு பாதியில் அவர்கள் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு முடிவுக்கு வருவது அவர்கள் பகுத்தறிவு ஆகாது. (இது தவறான பிரத்தியட்சப் பிரமானம்)
ஒரு உபமானத்தை எடுத்துக்கொண்டு இங்கு பார்ப்போம்
நம் தந்தையின் தந்தை நமக்கு தாத்தா (அப்பார்) அவரோட தாத்தாவுக்கு தாத்தாவை நாம் உயிருடன் பார்த்ததில்லை . ஆதலால் அவர் இல்லை என்று சொல்லுவது பகுத்தறிவு ஆகாது. நாம் இப்போது இருக்கிறோம் அது தான் பிரமானம்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நாக்கின் மூலம் பேசுபவர்கள். நாக்கு என்னிடம் இல்லை என்று சொல்வதற்கு ஈடாகும்.
அவர்கள் தவறாக உணர்ந்து, பொய்யான பதிலை பாமர மக்களிடம் சொல்லி அல்ப்ப ஓட்டிற்காக மக்களிடையே சமூக விரோதத்தை தூண்டி, அப்படி என்ன அழியாத பொருளை அவர்கள் அறிவால் என்ன உணந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மட்டும் வீட்டில் மறைமுகமாக கடவுள் படங்களை வைத்து வழிபட்டு, அவர்கள் சுயநலத்தால் அப்படி என்ன கண்டார்கள் என்றும் தெரியவில்லை. ஆத்மாவுக்கு புறம்பானவர்கள் ஒருவரும் இல்லை. ஆதலால், தான் என் முன்னோர், குரு பரம்பரையில் வந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் "மூர்க்க தேவோ பவ" (முட்டாள்களையும் தெய்வமாக நினை) என்று கூறியிருக்கிறார். ஆகையால் அவர்களிடம் வெறுப்பதற்கு ஒன்றும் இல்லை. இல்லாத விஷயத்திற்கு யாரும் இவ்வளவு தூரம் போராட மாட்டார்கள். ஆதலால் கடவுள் கட்டாயம் இருக்கிறார். அனைவரிடத்தும் கர்ம வினை விளையாடுகிறது!இப்படிப்பட்டவர்களிடம் சற்று அதிகமாகவே விளையாடுகிறது!!
அஸ¤ர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா : |
தாம்ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜன : ||
_ ஈசாவாஸ்யோபநிஷத் _3
அஸ¤ரப் பிறவிகள் அக்ஞான இருளில் மூடப்பட்டுள்ளன. யாரெல்லாம் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறந்தபின் அவ் அஸ¤ரலோகத்தை அடைகின்றனர்.
இதிகாசப் பூர்வமாக நிகழ்ச்சியின் உட்கருத்து ஒன்றை பார்ப்போம்.
அவதார மூர்த்திகளில் பிரபு ஸ்ரீ ராமரும் ஒருவர். வனத்தில் இருந்தபோது, ஆசையினால் மாயை மானை சீதா தேவி கேட்டதின் பொருட்டு மானை பிடிக்க பிரபு ஸ்ரீ ராமர் செல்கையில் லட்சுமனிடம் சீதா தேவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டுச் சென்றார். பல நிகழ்வுக்கு பின்பு இராவணனிடம் போராடி வெற்றிப்பெற்று சீதையுடன் அரண்மனைக்கு வந்த பிறகு பிரபு ஸ்ரீ ராமர் லட்சுமனனிடம் சீதா தேவியை வனத்தில் விட்டு வரும்படி உத்தரவிட்டார்.
இவ்விரண்டு நிகழ்ச்சியில் பிரபு ஸ்ரீ ராமர் என்னும் பரபிரம்மம் தான், இரண்டாவது நிகழ்ச்சியில் இருக்கும் பிரபு ஸ்ரீ ராமரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்தில், படைத்ததை துணைக்கொண்டு படைத்தவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
இந்த பிரபஞ்சத்தில், காப்பதை துணைக்கொண்டு காப்பவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
இந்த பிரபஞ்சத்தில், அழிந்ததை துணைக்கொண்டு அழிப்பவனை உணரவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?
ஜென் துறவி ஒருவரிடம் அவர் சீடர், "விவாதத்தாலும் வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.
"நிழல் என்னவென்று பார்வையற்ற ஒருவனுக்கு விளக்கும் முயற்சி போன்றது " என்றார் குரு.
ஒன்று அவர்களாக அறிந்துக்கொள்ள முற்பட வேண்டும் (யுக்திப் பிரமானம்) இல்லையெனில் சாஸ்த்திரத்தை நன்கு அறிந்த குரு மூலம் அறிந்து (சுருதிப் பிரமானம்) ஒப்புக்கொள்ள வேண்டும். இதுயெல்லாம் விட்டு விட்டு பாதியில் அவர்கள் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு முடிவுக்கு வருவது அவர்கள் பகுத்தறிவு ஆகாது. (இது தவறான பிரத்தியட்சப் பிரமானம்)
ஒரு உபமானத்தை எடுத்துக்கொண்டு இங்கு பார்ப்போம்
நம் தந்தையின் தந்தை நமக்கு தாத்தா (அப்பார்) அவரோட தாத்தாவுக்கு தாத்தாவை நாம் உயிருடன் பார்த்ததில்லை . ஆதலால் அவர் இல்லை என்று சொல்லுவது பகுத்தறிவு ஆகாது. நாம் இப்போது இருக்கிறோம் அது தான் பிரமானம்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நாக்கின் மூலம் பேசுபவர்கள். நாக்கு என்னிடம் இல்லை என்று சொல்வதற்கு ஈடாகும்.
அவர்கள் தவறாக உணர்ந்து, பொய்யான பதிலை பாமர மக்களிடம் சொல்லி அல்ப்ப ஓட்டிற்காக மக்களிடையே சமூக விரோதத்தை தூண்டி, அப்படி என்ன அழியாத பொருளை அவர்கள் அறிவால் என்ன உணந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மட்டும் வீட்டில் மறைமுகமாக கடவுள் படங்களை வைத்து வழிபட்டு, அவர்கள் சுயநலத்தால் அப்படி என்ன கண்டார்கள் என்றும் தெரியவில்லை. ஆத்மாவுக்கு புறம்பானவர்கள் ஒருவரும் இல்லை. ஆதலால், தான் என் முன்னோர், குரு பரம்பரையில் வந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் "மூர்க்க தேவோ பவ" (முட்டாள்களையும் தெய்வமாக நினை) என்று கூறியிருக்கிறார். ஆகையால் அவர்களிடம் வெறுப்பதற்கு ஒன்றும் இல்லை. இல்லாத விஷயத்திற்கு யாரும் இவ்வளவு தூரம் போராட மாட்டார்கள். ஆதலால் கடவுள் கட்டாயம் இருக்கிறார். அனைவரிடத்தும் கர்ம வினை விளையாடுகிறது!இப்படிப்பட்டவர்களிடம் சற்று அதிகமாகவே விளையாடுகிறது!!
அஸ¤ர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா : |
தாம்ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜன : ||
_ ஈசாவாஸ்யோபநிஷத் _3
அஸ¤ரப் பிறவிகள் அக்ஞான இருளில் மூடப்பட்டுள்ளன. யாரெல்லாம் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறந்தபின் அவ் அஸ¤ரலோகத்தை அடைகின்றனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.