Thursday, 15 January 2015

☼03-விழியும் வழியும்-03☼- முன்னுரை ‍‍۞தாஸோஹம் பிரபு۞


                               முன்னுரை

         கடவுளின் ஸ்ருஷ்டியில் எத்தனை எத்தனையோ படைப்புகள். அதில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள 86 லட்சம் யோனி (பேதங்கள்) உயிரின வகைகள் உள்ளன.


         இதில் ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிர்கள் அதன் இயல்பான போக்கில்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பகுத்தறிவுடன் கூடிய மேல்நிலையான மனிதநிலை வைத்துத்தான் அப்பெரிய நிலையான இன்றநிலையை அடையமுடியும்.

         மனிதன் மனிதனாக வாழ்கின்றானா என்று பார்ப்பதற்கிடையில் அவன் கீழான நிலையை வழுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் மனிதன் மனிதனுக்குரிய இலக்கணத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பின்புதான், தெய்வீக பெருநிலையை அடைய முடியும். மனிதன் ஏன் கீழ்நிலை நோக்கிப் போகிறான் என்று ஆராய்ந்து பார்க்கையில் தர்மத்திற்கு உட்படாத ஆசையின் காரணமாகத்தான்.

        இன்பத்திற்காக ஆசைபடுகிறான். இதில் இன்பத்தில்   நிலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு அடிப்படையில் அறியாமைதான் காரணம், அனைத்தும் ஒன்று என்பதை வேற்றுமையாகப் பார்க்கும் அறியாமையில்தான் அஞ்ஞானம் பிறக்கிறது. அனைத்தும் ஒரே இறையாற்றல் என்ற ஞானம்    பிறக்கிறதோ அன்றுதான் அஞ்ஞானம் அழிகிறது. பிரபஞ்சத்திற்கும் நமக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்று பார்த்து இறுதியாக அவை அனைத்தும் ஐக்கியத்துடன் அரவணைக்கும் முயற்சியே ஆத்மசாதனை.

        இதனால் சகலமும் தானே என்ற உணர்வின் காரணமாக ஆத்மசாதனையில் வெளிப்படும் நான்கு யோகங்கள்தான்_ கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் மற்றும் ராஜ யோகம்.

        ஆத்ம சாதனையின் பொருட்டு அடைய வேண்டிய அனைத்துக்கும் மேலான மோட்சத்தை (ஸ்தூல உடல் இருக்கும்போதே ஜீவன்முக்தி ) அடையப்பெற்றவன் ஆகிறான்.


         இறைவனிடம் முழுமையாக அகங்காரத்தை விட்டொழித்து சிரத்தையுடன் சரணாகதி அடைந்தால்தான், அப்பெருநிலை  வாய்க்கப்பெறும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.