உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி யாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரன் நாங்களே
-கம்பர்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி யாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரன் நாங்களே
-கம்பர்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
நீங்கள் இருக்கிறீர்களா? இல்லையா? ! பொதுவாக இருக்கிறீர்கள் என்றால் படைத்தலுக்கு உரிய கடவுள் கட்டாயம் இருந்துதான் ஆக வேண்டும். சாஸ்வதமாக நாம் இப்படியே உயிரோடு இங்கு இருக்கப்போவது இல்லை என்றபோதும் அழித்தலுக்கு உரிய கடவுள் கட்டாயம் இருந்துதான் ஆக வேண்டும். பிறந்த போது நீங்கள் இப்படி இல்லை. இப்போது இவ்வளவு பெரிய மனிதராக இருக்கிறீர்கள் எனில் காத்தலுக்குரிய கடவுள் கட்டாயம் இருந்துதான் ஆக வேண்டும்.
நமது உடலும் நாம் பிரபஞ்சத்தில் அனுபவிக்கும் அனைத்தும் (ஸ்தூல - தூல , சூட்சமம் ) பஞ்சபூதங்களால் ஆனது. இவற்றுள் நாம் அறிவுள்ளதை சேதனம் என்றும், அறிவில்லாததை அசேதனம் என்றும் பகர்கிறோம். முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது காராணமின்றி காரியம் இல்லை என்ற, என்றும் மாறுபடாத நியதி. நீங்கள் இருக்கின்றீர்கள் என்றால் உங்களை பெற்றெடுத்த தாய் தந்தை இருந்துதான் ஆகவேண்டும். உங்கள் தாய் தந்தையர்க்கும் இதேபோல பெற்றோர் இருந்து தான் ஆகவேன்டும். அவர்களின் முன்னோர்க்கு முன்னோர் என்று பார்த்து போய் கொண்டு இருந்தால் ஆதி முன்னோர் இருந்து தான் ஆகவேண்டும். ஆதி முன்னோரை படைத்த ஒருவர் தான் ஆதியும் இல்லாதவர், அவரே அந்தமும் இல்லாதவர். இதே பாங்கினில் ஒட்டு மொத்த படைப்பினை பார்த்தால் அவரே ஆதியும் இல்லாதவரும் அந்தமும் இல்லாதவரும் என்று தெள்ளத் தெளிவாக புரியும்.
கடவுள் என்றால் கலந்தும், கடந்தும், கடவுபவராகவும் (இயக்குபவர்) இறுதியில் தன்னுல் கடோபவராகவும் (ஒடுக்குபவர்) இருப்பவர்.
இந்த சகல பிரபஞ்சமும் பிரம்மமே. விஸ்தாரமாயிருக்கின்ற இத்த பிரபஞ்சமெல்லாம் ஆன்மாவே. ஓ பாவமற்றவனே நான்வேறு இந்த பிரபஞ்சம் வேறு என்கிற பிரம்மையை தள்ளிவிடு.
_ மகோப நிஷத்
ஐம்பூதங்களும் பிரம்மத்திலிருந்து தான் உண்டாகி அதனுள்ளும் அந்த பிரம்மம் தான் இருக்கிறது. சகலமும் பிரம்மத்தில் இருந்து உண்டாகி பிரம்மத்திலேயே ஒடுங்குகிறது.
இப்போது நீங்கள் படிக்கும் புத்தகம் எதனால் உருவானது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் காகிதங்களால். காகிதம் ஒருவகை மரக்கூழினால் ஆனது. மரக்கூழ் எப்படி உண்டாயிற்று என்று பார்த்தால் மரத்திலிருந்து. மரம் எவ்வாறு உண்டாயிற்று என்று ஆராயுமிடத்தில் விதையாகிய மண்ணிலிருந்து உண்டாகிறது. மண் நீ¡¢லிருந்து உண்டாகிறது. நீர் நெருப்பிலிருந்து உண்டாகிறது. நெருப்பு காற்றிலிருந்து உண்டாகிறது. காற்று ஆகாசத்திலிருந்து உண்டாகிறது. ஆகாசம் எவ்வாறு உருவானது என்று கேட்குமிடத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு சக்தியிலிருந்து என்பீர். அதுதான் பரபிரம்மம்.
தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச : ஸ்ம்பூத : |
ஆகாசத்வாயு : | வாயோரக்னி : | அக்னேராப : |
அத்ப்ய : | ப்ருதிவீ : | ப்ருதிவ்யா ஓஷதய : |
ஓஷதீப்யோSன்னம் | அன்னாத்புருஷ : |
_ தைத்திரீயோபநிஷதம் 2-1
பிரம்மம் எனப்படுகிற அந்த ஆத்மனிடமிருந்து நிச்சயமாகவே ஆகாசம் உண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று. வாயுவிலிருந்து அக்னி உண்டாயுற்று. அக்னியிலிருந்து அப்பு உண்டாயுற்று. அப்புவிலிருந்து பிருதிவி உண்டாயிற்று. பிருதிவியிலிருந்து மூலிகைகள் உண்டாயின. மூலிகையிலிருந்து அன்னம் உண்டாயிற்று. அன்னத்திலிருந்து மனித சரீரம் உண்டாயிற்று.
இந்த சுலபமான ஆராய்ச்சியிலிருந்து அனைத்தும் பிரம்மம் என உணர்வதே உண்மை அறிவு (பிரக்ஞானம் பிரம்மம்) தான் மெய்ஞானம் என்ற ஆன்மிகம். அனைவரிடமும் கட்டாயம் இந்த (கடவுள் இருக்கிறாரா? இல்லையா?) என்ற கேள்வி எழ வேண்டும். அப்போது தான் ஆன்மிகத் தேடல் முழுமையுடன் நிறைவு பெறும். ஆராய்ச்சியின் போது தவறான வழியில் போய் முடிவு எடுக்கக்கூடாது.
நமது அனைத்து செயல்களும் எண்ணங்களும் அறிந்தோ அறியாமலோ ஆன்மிகத் தேடலை நோக்கியதாகவே உள்ளது. நீங்கள் விழிப்புணர்வுடன் தன்னில் தானே ஆராய்ச்சி செய்தால் மட்டும் தான் அகண்ட ஸத் ஸித் ஆனந்தத்தை அடைய முடியும்.
கஸ்தூரி மானின் நாபியில் கஸ்தூரி உண்டாகிறது. அந்தக் கஸ்தூரியின் நறுமணத்தில் நாட்டம் கொண்டு, மான்கள் அங்கும் இங்கும் ஓடி அலைகின்றன. அந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என்பதை மான்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
இதைப் போலவேதான், இறைவன் மனிதனின் உடலில் வசிக்கிறார். என்றாலும் இந்த உண்மையை மனிதன் அறியவில்லை.அதனால் ஆனந்தத்தை அங்கும் இங்கும் மனிதன் தேடி அலைகிறான். இறைவன் தன் உள்ளத்தில் இருக்கிறான் என்பதை மனிதன் அறிவதில்லை.
_ தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி
விஞ்ஞானம் என்பதே ஓர்வித அறியாஞானம் (அக்ஞானம்) என்கிற அறியாமையே! ஒருவன் ஆதாரத்துடன் உலகம் சதுரம் என்றால் மற்றொறு நாள் வேறொருவர் ஆதாரத்துடன் உருண்டை என்பான். இன்னும் அரை வட்டம், முக்கோணம்,....(இன்னும் பல) காத்திருக்கிறது. வடிவம் கொடுப்பதில் நம்மவர்க்கு இது என்ன புதியதா? வடிவம் பல கொடுத்து பல பெயர்களை சூட்டி வழிபட்டு உண்மைத்தத்துவத்தை அறிந்துக்கொள்ளாமல், இன்று தாங்கள் வாழும் வசதிக்காக புதிய மார்க்கத்தை பலர் தொழில்ரீதியாக உருவாக்கிவிட்டனர். இதன் மூலம் மக்கள் ஆவரணத்தில் (தவறான மார்கத்தில்) செல்கிறார்கள். இத்தகைய போக்கு இறுதியில் இதனை ஏற்படுத்தியோருக்கும் வழிபட்டோருக்கும் தக்க துக்கம் தரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
இதனால் வரும் கேடு என்னவென்றால் வேடிக்கை காட்டுகிறவன் வேடிக்கை காட்டிக் கொண்டே இருப்பான். வேடிக்கை பார்ப்பவன் வேடிக்கையை பார்த்துக்கொண்டே இருப்பான். ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பான். பெறுவதற்கு அறிய இம்மானிட சரீரத்தைப் பெற்றான பிறகும் கூட பகுத்தறிவை உபயோகித்து ஏமாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவில்லை என்றால் ஓர் அறிவிலிருந்து ஆறறிவுடைய மானிட வாழ்க்கை பெற்றிருக்கும் இந்நிலையில் இம்மானிட வாழ்க்கையை வீணாக்கியவன் ஆகிறான். இதனால் வரும் பயன் யாதொன்றும் இல்லை. நாம் மானிடனாய் பிறந்து, வந்த நோக்கத்தை மறந்துவிட்ட நிலையில் இறுதியில் ஏமாற்றுபவனும் ஏமாறுபவனும் வாழ்க்கையில் ஏமாந்தவர்கள் ஆகிறார்கள்.
ஆனால் உண்மைப் பொருள் என்பது ஒன்றே. அதுவே மெய்ப்பொருள், அதுதான் மெய்ஞானம். அதுதான் இது, இதுதான் அது, என்பதுதான் ஞானம். இதைப் படித்ததும் உங்களுக்கு காமெடியாக தெரியலாம், உண்மையில் இதை காமெடியாக நினைத்து இப்படியே விட்டுவிட்டால், இம்மானிட வாழ்க்கையே காமெடியாக போய்விடும் !
பெயர் அளவில் பலவாக இருந்தாலும் பொருள் அளவில் ஒன்றுதான். ஒன்றை இரண்டு என்று போதித்து கையாளுதல் அக்ஞானம்.
" ஒன்றென உணர்வது ஞானம் ; பலவாகக் காண்பது அக்ஞானம்"
_ பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
இன்னும் விளக்கமாக உங்களுக்குச் சொன்னால் நீங்கள் கோயிலில் சொகுசாக தரிசனம் செய்ய பிரத்தியேகமான நுழைவுச்சீட்டை வாங்கி இறைவனை கண்காட்சி பொருளாகவே ஆக்கி உள்ளே செல்கிறீர்கள். நீங்கள் நினைக்கும் அந்த கண்காட்சிப் பொருளை உங்களுக்குள்ளே பார்க்க முற்பட வேண்டும். அனைத்திலும் அந்த கண்காட்சி பொருளாகவே காணவேண்டும்.
" பேதபுத்தியைத் தருவது அக்ஞானம் ; ஐக்கியபுத்தியைத்
தருவது ஞானம். "
_ பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
உண்மைப்பொருள் என்பது ஒன்றே, அதுவே மெய்ப்பொருள் மட்டுமே. அதுதான் மெய்ஞானம். இப்பேர்ப்பட்ட ஞானம் உதிக்கையில் அக்ஞானம் என்னும் இருள் மறைகிறது.
விஞ்ஞானம் என்பது வெளி பிரபஞ்சத்தை நுணுக்கமாக ஆராயும் நுட்ப அறிவு. ஆனால் , மெய்ஞ்ஞானம் என்பது உள், புற ஆராய்ச்சி செய்து தத்துவ உண்மையைக் காணும் பேரறிவு.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.