தாஸோஹத்தின் உரை
சித்திரைச் சாவடியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமத்தில், ஆஸ்ரமத்திற்கு வரும் மெய்யன்பர்களும், தாய்மார்களும் என்னிடம் சற்று உரையாடிய பின்பு, வழக்கமாக கேட்கும் கேள்வி,"எப்படியப்பா இந்த வயதில் ஆன்மிக வழியில்?"
இதுபோன்று பல இடத்தில் என்னிடம் பலபேர் சலிக்காமல் கேட்கும் கேள்வி. அப்போது நான் நினைத்துக் கொள்வது ஆன்மிக வழியைத் தவிர இங்கு வேறொரு வழி இல்லையே!
அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக பாதையில் தான் சென்று கொண்டு இருக்கின்றோம். இதை புரிந்துக் கொண்டால் வாழ்வில் எல்லாம் நிறைவு. அந்தக் கேள்விக்கு உண்மையான பதில் "எல்லாம் அவன் செயல்". சம்மந்தமில்லாமல் பதில் கூறுகிறேன் என்று நினைக்காமல் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அதே பதிலை அடக்கி விடலாம். அதுதான் உண்மை. சிலர் கேள்வி கேட்பதில் அர்த்தமற்ற தவறான கேக்ள்வியைக் கேட்டு தங்கள் வாழ்கையையும் அக்கேள்விக்கேற்ப தவறாகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். துன்பத்துடன் கூடிய அழிவு என்ற பதிலே அவர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்துக் கொண்டால் இன்பத்திற்குரிய மரணமில்லாப் பெருவாழ்வு வாழக் கற்றுக்கொள்வார்கள்.
மானிடனாக பிறந்த நம்மிடம் வாய்,மூக்கு,கண்,காது, இவை அனைத்தும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் கோடான கோடி மனிதர்களின் ஒரே மாதிரியான முகம் இருப்பதில்லை. இது எவ்வளவு பெரிய விந்தை!.
உலகில் ஏழு மனிதர்கள் ஒரே மாதிரியான முகம் என்பர். அதுவும் ஒரு விந்தை தான்! பூவைப் பாருங்கள் மலர்கிறது, அதே பூவைப் பாருங்கள் வாடுகிறது. மரத்தில் இருக்கும் இலைகள் அசைவதைப் பாருங்கள். இலை உதிர்வதைப் பாருங்கள். உதிர்ந்த இலைகளை தாங்க பூமி இருக்கின்றது. இதையெல்லாம் என்ன சொல்வது? (அவனன்றி ஓர் அணுவும் அசையாது) இன்னும் உணரவில்லை என்றால் இவர்களை விலங்கு நிலையில் ஒப்பிட்டு சொல்வதும் கூட அருகதை இல்லை. காரணம், அதுவும் கூட பண்பட்டு, தன்னை அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்க சூழல் தன்மை ஒத்துப் போகிறது. அவர்களை பேய் என்றுதான் வள்ளுவர் கூறச் சொல்லியிருக்கிறார். பேய் வந்தால் பயந்து ஓடுவது போல் ஒதுங்க அறிவுறுத்துகிறார்.
எப்படி இக்கருவியை ஆசிரமத்திற்கு செல்ல கர்த்தா பயன்படுத்தியதை என்று பார்ப்போம்.
என் வீட்டில் அனைவருக்கும் ஏதோ ஓரளவுக்கு பக்தி உள்ளது என்று சொல்வதா? ஸ்ரீ நாராயணா மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது வெள்ளிக்கிழமை தோறும் சின்மயா மிஷ்னிலிருந்து ஆன்மிக சத்சங்கம் நடைபெற்றதனால் என்று சொல்வதா? பள்ளி விடுமுறையில் மாமாவுடன் அருள் சூழ்ந்த இடத்திற்கு சென்றதனால் என்று சொல்வதா? அன்று ஒருநாள் மார்கழி மாதம் "SAT-VICHAR" மூலம் கிடைத்த ஜீவபாவனா புத்தகத்தை படித்தான பிறகு தினமும் சூரிய பிரார்த்தனை செய்ததால் என்று சொல்வதா? அவர்கள் ஒரு வார காலம் ஆசிரமத்தில் தங்கி பாமரனைப் பண்புள்ளவனாக்கி, பண்புள்ளவனை தெய்வமாக ஆக்க திட்டமிடிருப்பதை என் தாயிடம் அறியப் பெற்றேன். அதன்பின் நம் ஊரில் உள்ள ஆசிரமத்திற்கு நான் போக வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக சில வருடங்களாகியும் செல்ல முடியவில்லை. அதனால் சூழ்நிலைகளை குறை கூறுவதா? எனது உயர்நிலை படிப்பை இவான்ஞ்சலின் மெட்¡¢க்குலேசன் மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது தினமும் கிறிஸ்துவ மாணவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ நான் கட்டாயம் கலந்து கொண்டதனால் என்று சொல்வதா?
அப்போது 2009 வருடம் ஜனவரி 31, அன்று எனது பிறந்த நாள். அன்றைய தினத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பள்ளியின் ஏற்பாட்டில் கூட்டுப்பிரார்த்தனைக்காக பெதஸ்தா சர்ச்சிற்கு சென்றபோது, அதில் அவர்கள் சொன்னபடி கண்களை மூடி உட்கார்ந்த போது சர்ச்சில் இருப்பவர்கள் தலையில் கை வைத்தார்கள். அப்போது என் உடலில் ஏதோ ஒன்று உள்ளே இறங்குவதை நான் அங்கே உணர்ந்ததனால் என்று சொல்வதா?
திருவிளையாடல், தெய்வம், திருவருள். கந்தன் கருணை, போன்ற படங்களைப் பார்த்து என்னை அறியாமலையே பூரித்து கண்ணீர் விட்டதனால் என்று சொல்வதா? ஒருநாள் விநாயகர் சதுர்த்தி அன்று 'அகஸ்தியர்' படத்தை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்த போது தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பதை சிறுவன் பாடி நடிக்கையில் நான் இவ்வளவு நாள் வீணாக்கி விட்டேன் என்று நினைத்ததை சொல்வதா?
எனக்கு இதுதான் என்று சரியாக தீர்மானித்து பதிலைக் கூற முடியவில்லை என்றபோதிலும், "எல்லாம் அவன் செயல்" என்று நிச்சயித்துக் கூறமுடியும்.
"கற்பகம் என்ஜீனியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, சித்திரைச் சாவடி ஆசிரமத்திற்கு போக அன்று மாலை திட்டமிட்டிருந்தேன். அதன்படி அங்கு சென்றபோது, ஆசிரமத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் தோட்டத்தில் 85 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் தோட்டத்து வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் இவரிடம் என்ன பேசுவது என்றும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமலும் வீடு திரும்பி விட்டேன். அப்போது எனக்கு தெரியவில்லை இவர்தான் தவத்திரு. ஸ்ரீமத் சுவாமி ஈஸ்வரானந்தா அவர்கள் என்று. இவர்தான் இனி பரஞானத்தை அடைய உண்மை மார்க்கத்தை காட்டப் போகும் குரு என்றும், இவரிடம் என் வாழ்வில் ஏராளம் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
வீடு திரும்பியானபோது எங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் கருப்பன் அவர்களிடம் "உனக்கு சித்திரைச் சாவடி ஆஸ்ரமத்தில் சாமியாரைத் தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு நன்றாகத் தெரியும் என்றார். பின்பு அவரை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆசிரமத்திற்கு சென்றடைந்தேன். அப்போது, அவர் சாமியிடம் நான் வசிக்கும் இடத்தைக் கூறி அறிமுகப்படுத்தினார். அதன்பின் "சிகாகோ பிரசங்கங்களை" படிக்கும்படி சொன்னார். அந்த புத்தகத்தை வாங்கியான பிறகு இருவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டோம். கருப்பன் என்னிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது என்னிடமிருந்த 10ரூபாயை அவருக்கு கொடுத்தேன். பின்பு அவர் என்னிடம் " நான் ஒரு மணி நேரம் வேலை செய்தால், 100ரூபாய் சம்பாதித்திருப்பேன்" என்றார். காரணம் நான் கருப்பனுடன் ஒரு மணிநேரம் ஆசிரமத்தில் இருந்தேன். "இன்னும் பொழுது சாய 1 மணி நேரம் இருக்கிறது" என்றேன், அவர் சிரிப்புடன் சென்று விட்டார்.
நான் கல்லூரி விடுமுறை நாட்களிலும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆசிரமத்திற்கு சென்று வந்தேன். அப்போது சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டும்தான் என் வீட்டிற்குச் செல்வேன். ஆதலால் வீட்டிலும், சமூகத்திலும் எனக்கு பல எதிர்ப்புகள். அதிலும் பிரம்மச்சாரி ஆசிரமத்திற்கு 'வெள்ளை நிற' ஆடையணிந்து செல்வது மற்றவர்களின் கண்களிற்கு வித்தியாசமாக பட்டது. ஆசிரமத்திற்கு சென்றான பிறகு, ஸ்வாமி சித்பவானந்தா, ஸ்வாமி குருபரானந்தா, ஸ்வாமி ஓம்காரனந்தா, இவர்களின் 'அந்தர்யோகம்' CD-யின் மூலம் கேட்கும் வாய்ப்பு ஆசிரமத்தில் அமைந்தது.
கல்லூரி சென்றான பின்பும் அவர்களின் அந்தர்யோகத்தை செல்போன் மூலம் ஹெட்போனில் கல்லூரி வகுப்பு நடக்கும் போதே ஆசிரியருக்கு தெரியாமல் கேட்கவும், இவர்களின் புத்தகங்களை படிக்கவும் எனக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை வாய்ப்பாக அமைந்தது. இதில் ஸ்வாமி குருபரானந்தா அவர்களின் சத்சங்கத்தை www.poornalayam.org என்பதில் இலவசமாக வெளியிட்டார்கள். இந்த இணையதளத்தை எனது வகுப்பில் படித்த மாணவர்களும் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும், காரணம் இதை நான் வகுப்பிற்கு வந்தான பிறகு கரும்பலகையில் www.poornalayam.org என்பதை எழுதுவதையும் கல்லூரியில் படித்த ஏனைய மாணவர்கள் அறிய பல வகைகளில் வெளிப்படுத்தினேன்.
இதையெல்லாம மையமாக வைத்துக்கொண்டுதான் ஆசிரமத்திற்கு வருவதற்கு முன் என்பதை, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதும் மற்றும் ஆசிரமம் வந்தான பிறகு நான் அறிந்து புரிந்து இயற்றிய "ப்ரபோத ஸமயே நிர்வாணம்" என்பதை "நான் யார்?" என்று பிரித்து முதல் அத்தியாயமும், இரண்டாம் அத்தியாயமும் என்ற தலைப்பில் எழுத எனது ஆதி குலதெய்வமான அருள்மிகு பத்ரகாளி அம்மனும், கீரனூர் அருள்மிகு ஸ்ரீ செல்வநாயகி அம்மனும், என் தோட்டத்தில் பூசை செய்யும் விநாயகரையும், கருப்பராயனையும், கன்னிமாரையும், நான் தினமும் கல்லூரியில் படிக்கும்போது வீட்டிலிருந்து அரசு பேருந்தில் சென்று 7. 25am க்கு பேரூர் செட்டிபாளையம் அடைந்தான பிறகு அங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் 7. 30am க்குள் வணங்கி கல்லூரி பேருந்தில் சென்று விடுவேன். அந்த அம்மனும் மாலை கல்லூரி பேருந்திலிருந்து இறங்கியான பிறகு வழிபடும் பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு கரிய காளியம்மன், அருள்மிகு மாகாளி அம்மனையும் மற்றும் மாதத்தில் ஒருநாள் பரிவிராஜக ஆன்மிக பயணம் என்ற கணக்கில் நான் வணங்கும் பேரூர் பட்டீஸ்வரரையும், வெள்ளிங்கிரி ஆண்டவரையும், முத்துவாளி அம்மனையும் மற்றும் ஏனைய ஆசிரமத்தின் குருக்களையும் வேண்டி வணங்கி இந்த நூலை எழுதி இருக்கிறேன்.
இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நான் புதிதாக எழுதவில்லை. காரணம், அக்காலத்திலே முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும், மகான்களும், சான்றோர் பெருமக்களும், தங்களது தவவலிமையால் ஏற்கனவே கூறி உள்ளனர். நான் அறிந்து உணர்ந்த அணுவிலும் அணுவாய் உள்ள கருத்துக்களை அடியேன் கூறி இருக்கிறேன். இதில் எவரையும் குறை சொல்வதோ அல்லது எவருக்கும் வருத்தம் உண்டாக்குவதோ என் நோக்கமில்லை. என்னுடைய புரிதல்களை பகிரும் ஒரு முயற்சி மட்டுமே.
நம் பெரியோர்கள் கோமாளித்தனமாக எதையும் சொல்லவில்லை. உதாரணத்திற்கு, வேளாண்மை பயிர் செய்யும் காட்டில் வைத்திருக்கும் கோமாளி (த்ருஷ்டி பொம்மை) கோமாளித்தனமாக ஏற்படுத்தியது என்று நீங்கள் நினைத்தால் உங்களைவிட கோமாளி இல்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளி.
இந்த புத்தகத்தில்(வழியும் விழியும்) உங்கள் மனதைப் புண் படுத்தினாலோ அல்லது கோட்பாடுகளை மீறி இதில் கூறப்பட்டிருந்தாலோ உங்களுக்குத் தக்கவாறு அர்த்தம் திருத்தம் பண்ணி தக்க வினையைச் சம்பாதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
நன்றி!
சித்திரைச் சாவடியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமத்தில், ஆஸ்ரமத்திற்கு வரும் மெய்யன்பர்களும், தாய்மார்களும் என்னிடம் சற்று உரையாடிய பின்பு, வழக்கமாக கேட்கும் கேள்வி,"எப்படியப்பா இந்த வயதில் ஆன்மிக வழியில்?"
இதுபோன்று பல இடத்தில் என்னிடம் பலபேர் சலிக்காமல் கேட்கும் கேள்வி. அப்போது நான் நினைத்துக் கொள்வது ஆன்மிக வழியைத் தவிர இங்கு வேறொரு வழி இல்லையே!
அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக பாதையில் தான் சென்று கொண்டு இருக்கின்றோம். இதை புரிந்துக் கொண்டால் வாழ்வில் எல்லாம் நிறைவு. அந்தக் கேள்விக்கு உண்மையான பதில் "எல்லாம் அவன் செயல்". சம்மந்தமில்லாமல் பதில் கூறுகிறேன் என்று நினைக்காமல் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அதே பதிலை அடக்கி விடலாம். அதுதான் உண்மை. சிலர் கேள்வி கேட்பதில் அர்த்தமற்ற தவறான கேக்ள்வியைக் கேட்டு தங்கள் வாழ்கையையும் அக்கேள்விக்கேற்ப தவறாகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். துன்பத்துடன் கூடிய அழிவு என்ற பதிலே அவர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்துக் கொண்டால் இன்பத்திற்குரிய மரணமில்லாப் பெருவாழ்வு வாழக் கற்றுக்கொள்வார்கள்.
மானிடனாக பிறந்த நம்மிடம் வாய்,மூக்கு,கண்,காது, இவை அனைத்தும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் கோடான கோடி மனிதர்களின் ஒரே மாதிரியான முகம் இருப்பதில்லை. இது எவ்வளவு பெரிய விந்தை!.
உலகில் ஏழு மனிதர்கள் ஒரே மாதிரியான முகம் என்பர். அதுவும் ஒரு விந்தை தான்! பூவைப் பாருங்கள் மலர்கிறது, அதே பூவைப் பாருங்கள் வாடுகிறது. மரத்தில் இருக்கும் இலைகள் அசைவதைப் பாருங்கள். இலை உதிர்வதைப் பாருங்கள். உதிர்ந்த இலைகளை தாங்க பூமி இருக்கின்றது. இதையெல்லாம் என்ன சொல்வது? (அவனன்றி ஓர் அணுவும் அசையாது) இன்னும் உணரவில்லை என்றால் இவர்களை விலங்கு நிலையில் ஒப்பிட்டு சொல்வதும் கூட அருகதை இல்லை. காரணம், அதுவும் கூட பண்பட்டு, தன்னை அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்க சூழல் தன்மை ஒத்துப் போகிறது. அவர்களை பேய் என்றுதான் வள்ளுவர் கூறச் சொல்லியிருக்கிறார். பேய் வந்தால் பயந்து ஓடுவது போல் ஒதுங்க அறிவுறுத்துகிறார்.
எப்படி இக்கருவியை ஆசிரமத்திற்கு செல்ல கர்த்தா பயன்படுத்தியதை என்று பார்ப்போம்.
என் வீட்டில் அனைவருக்கும் ஏதோ ஓரளவுக்கு பக்தி உள்ளது என்று சொல்வதா? ஸ்ரீ நாராயணா மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது வெள்ளிக்கிழமை தோறும் சின்மயா மிஷ்னிலிருந்து ஆன்மிக சத்சங்கம் நடைபெற்றதனால் என்று சொல்வதா? பள்ளி விடுமுறையில் மாமாவுடன் அருள் சூழ்ந்த இடத்திற்கு சென்றதனால் என்று சொல்வதா? அன்று ஒருநாள் மார்கழி மாதம் "SAT-VICHAR" மூலம் கிடைத்த ஜீவபாவனா புத்தகத்தை படித்தான பிறகு தினமும் சூரிய பிரார்த்தனை செய்ததால் என்று சொல்வதா? அவர்கள் ஒரு வார காலம் ஆசிரமத்தில் தங்கி பாமரனைப் பண்புள்ளவனாக்கி, பண்புள்ளவனை தெய்வமாக ஆக்க திட்டமிடிருப்பதை என் தாயிடம் அறியப் பெற்றேன். அதன்பின் நம் ஊரில் உள்ள ஆசிரமத்திற்கு நான் போக வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக சில வருடங்களாகியும் செல்ல முடியவில்லை. அதனால் சூழ்நிலைகளை குறை கூறுவதா? எனது உயர்நிலை படிப்பை இவான்ஞ்சலின் மெட்¡¢க்குலேசன் மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது தினமும் கிறிஸ்துவ மாணவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ நான் கட்டாயம் கலந்து கொண்டதனால் என்று சொல்வதா?
அப்போது 2009 வருடம் ஜனவரி 31, அன்று எனது பிறந்த நாள். அன்றைய தினத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பள்ளியின் ஏற்பாட்டில் கூட்டுப்பிரார்த்தனைக்காக பெதஸ்தா சர்ச்சிற்கு சென்றபோது, அதில் அவர்கள் சொன்னபடி கண்களை மூடி உட்கார்ந்த போது சர்ச்சில் இருப்பவர்கள் தலையில் கை வைத்தார்கள். அப்போது என் உடலில் ஏதோ ஒன்று உள்ளே இறங்குவதை நான் அங்கே உணர்ந்ததனால் என்று சொல்வதா?
திருவிளையாடல், தெய்வம், திருவருள். கந்தன் கருணை, போன்ற படங்களைப் பார்த்து என்னை அறியாமலையே பூரித்து கண்ணீர் விட்டதனால் என்று சொல்வதா? ஒருநாள் விநாயகர் சதுர்த்தி அன்று 'அகஸ்தியர்' படத்தை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்த போது தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பதை சிறுவன் பாடி நடிக்கையில் நான் இவ்வளவு நாள் வீணாக்கி விட்டேன் என்று நினைத்ததை சொல்வதா?
எனக்கு இதுதான் என்று சரியாக தீர்மானித்து பதிலைக் கூற முடியவில்லை என்றபோதிலும், "எல்லாம் அவன் செயல்" என்று நிச்சயித்துக் கூறமுடியும்.
"கற்பகம் என்ஜீனியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, சித்திரைச் சாவடி ஆசிரமத்திற்கு போக அன்று மாலை திட்டமிட்டிருந்தேன். அதன்படி அங்கு சென்றபோது, ஆசிரமத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் தோட்டத்தில் 85 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் தோட்டத்து வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் இவரிடம் என்ன பேசுவது என்றும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமலும் வீடு திரும்பி விட்டேன். அப்போது எனக்கு தெரியவில்லை இவர்தான் தவத்திரு. ஸ்ரீமத் சுவாமி ஈஸ்வரானந்தா அவர்கள் என்று. இவர்தான் இனி பரஞானத்தை அடைய உண்மை மார்க்கத்தை காட்டப் போகும் குரு என்றும், இவரிடம் என் வாழ்வில் ஏராளம் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
வீடு திரும்பியானபோது எங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் கருப்பன் அவர்களிடம் "உனக்கு சித்திரைச் சாவடி ஆஸ்ரமத்தில் சாமியாரைத் தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு நன்றாகத் தெரியும் என்றார். பின்பு அவரை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆசிரமத்திற்கு சென்றடைந்தேன். அப்போது, அவர் சாமியிடம் நான் வசிக்கும் இடத்தைக் கூறி அறிமுகப்படுத்தினார். அதன்பின் "சிகாகோ பிரசங்கங்களை" படிக்கும்படி சொன்னார். அந்த புத்தகத்தை வாங்கியான பிறகு இருவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டோம். கருப்பன் என்னிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது என்னிடமிருந்த 10ரூபாயை அவருக்கு கொடுத்தேன். பின்பு அவர் என்னிடம் " நான் ஒரு மணி நேரம் வேலை செய்தால், 100ரூபாய் சம்பாதித்திருப்பேன்" என்றார். காரணம் நான் கருப்பனுடன் ஒரு மணிநேரம் ஆசிரமத்தில் இருந்தேன். "இன்னும் பொழுது சாய 1 மணி நேரம் இருக்கிறது" என்றேன், அவர் சிரிப்புடன் சென்று விட்டார்.
நான் கல்லூரி விடுமுறை நாட்களிலும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆசிரமத்திற்கு சென்று வந்தேன். அப்போது சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டும்தான் என் வீட்டிற்குச் செல்வேன். ஆதலால் வீட்டிலும், சமூகத்திலும் எனக்கு பல எதிர்ப்புகள். அதிலும் பிரம்மச்சாரி ஆசிரமத்திற்கு 'வெள்ளை நிற' ஆடையணிந்து செல்வது மற்றவர்களின் கண்களிற்கு வித்தியாசமாக பட்டது. ஆசிரமத்திற்கு சென்றான பிறகு, ஸ்வாமி சித்பவானந்தா, ஸ்வாமி குருபரானந்தா, ஸ்வாமி ஓம்காரனந்தா, இவர்களின் 'அந்தர்யோகம்' CD-யின் மூலம் கேட்கும் வாய்ப்பு ஆசிரமத்தில் அமைந்தது.
கல்லூரி சென்றான பின்பும் அவர்களின் அந்தர்யோகத்தை செல்போன் மூலம் ஹெட்போனில் கல்லூரி வகுப்பு நடக்கும் போதே ஆசிரியருக்கு தெரியாமல் கேட்கவும், இவர்களின் புத்தகங்களை படிக்கவும் எனக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை வாய்ப்பாக அமைந்தது. இதில் ஸ்வாமி குருபரானந்தா அவர்களின் சத்சங்கத்தை www.poornalayam.org என்பதில் இலவசமாக வெளியிட்டார்கள். இந்த இணையதளத்தை எனது வகுப்பில் படித்த மாணவர்களும் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும், காரணம் இதை நான் வகுப்பிற்கு வந்தான பிறகு கரும்பலகையில் www.poornalayam.org என்பதை எழுதுவதையும் கல்லூரியில் படித்த ஏனைய மாணவர்கள் அறிய பல வகைகளில் வெளிப்படுத்தினேன்.
இதையெல்லாம மையமாக வைத்துக்கொண்டுதான் ஆசிரமத்திற்கு வருவதற்கு முன் என்பதை, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதும் மற்றும் ஆசிரமம் வந்தான பிறகு நான் அறிந்து புரிந்து இயற்றிய "ப்ரபோத ஸமயே நிர்வாணம்" என்பதை "நான் யார்?" என்று பிரித்து முதல் அத்தியாயமும், இரண்டாம் அத்தியாயமும் என்ற தலைப்பில் எழுத எனது ஆதி குலதெய்வமான அருள்மிகு பத்ரகாளி அம்மனும், கீரனூர் அருள்மிகு ஸ்ரீ செல்வநாயகி அம்மனும், என் தோட்டத்தில் பூசை செய்யும் விநாயகரையும், கருப்பராயனையும், கன்னிமாரையும், நான் தினமும் கல்லூரியில் படிக்கும்போது வீட்டிலிருந்து அரசு பேருந்தில் சென்று 7. 25am க்கு பேரூர் செட்டிபாளையம் அடைந்தான பிறகு அங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் 7. 30am க்குள் வணங்கி கல்லூரி பேருந்தில் சென்று விடுவேன். அந்த அம்மனும் மாலை கல்லூரி பேருந்திலிருந்து இறங்கியான பிறகு வழிபடும் பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு கரிய காளியம்மன், அருள்மிகு மாகாளி அம்மனையும் மற்றும் மாதத்தில் ஒருநாள் பரிவிராஜக ஆன்மிக பயணம் என்ற கணக்கில் நான் வணங்கும் பேரூர் பட்டீஸ்வரரையும், வெள்ளிங்கிரி ஆண்டவரையும், முத்துவாளி அம்மனையும் மற்றும் ஏனைய ஆசிரமத்தின் குருக்களையும் வேண்டி வணங்கி இந்த நூலை எழுதி இருக்கிறேன்.
இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நான் புதிதாக எழுதவில்லை. காரணம், அக்காலத்திலே முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும், மகான்களும், சான்றோர் பெருமக்களும், தங்களது தவவலிமையால் ஏற்கனவே கூறி உள்ளனர். நான் அறிந்து உணர்ந்த அணுவிலும் அணுவாய் உள்ள கருத்துக்களை அடியேன் கூறி இருக்கிறேன். இதில் எவரையும் குறை சொல்வதோ அல்லது எவருக்கும் வருத்தம் உண்டாக்குவதோ என் நோக்கமில்லை. என்னுடைய புரிதல்களை பகிரும் ஒரு முயற்சி மட்டுமே.
நம் பெரியோர்கள் கோமாளித்தனமாக எதையும் சொல்லவில்லை. உதாரணத்திற்கு, வேளாண்மை பயிர் செய்யும் காட்டில் வைத்திருக்கும் கோமாளி (த்ருஷ்டி பொம்மை) கோமாளித்தனமாக ஏற்படுத்தியது என்று நீங்கள் நினைத்தால் உங்களைவிட கோமாளி இல்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளி.
இந்த புத்தகத்தில்(வழியும் விழியும்) உங்கள் மனதைப் புண் படுத்தினாலோ அல்லது கோட்பாடுகளை மீறி இதில் கூறப்பட்டிருந்தாலோ உங்களுக்குத் தக்கவாறு அர்த்தம் திருத்தம் பண்ணி தக்க வினையைச் சம்பாதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
நன்றி!
என்றும் அன்புடன்,
ஆன்மீக சேவையில்
தாஸோஹம் த. பிரபு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.